வெள்ளைப் பன்றிக் குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதி நவீன தொழில் நுட்பத்துடன், அமெரிக்க தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து ‘ஜெட்லி’ என்ற படம் தயாராகி வருகிறது.
மிகப் பிரமாண்டமாகவும் 3-D தொழிற் நுட்பத்துடன் இன்னொரு பரிமாணமான ஐமேக்ஸ் முறையில் இந்த ‘ஜெட்லி’ படம் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜெகன்சாய் இயக்கி வருகிறார்.
ஜெட்லீ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு ‘இடி மின்னல் புயல் காதல்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – துலீப்குமார். இவர் ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’ உட்பட பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்ததுடன் ‘ஜெட்லீ’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு.
இசை – C.சத்யா, எடிட்டிங் – பால்ராஜ், ஸ்டன்ட் – நரேன், கலை – குருராஜ், தயாரிப்பு – ஜெகன்சாய், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யோகேந்திரன் மகேஷ். இவர் இயக்குனர் ஹரியிடம் பல படங்களுக்கு உதவியாளராக இருந்ததுடன் சிவசண்முகத்திடம் ‘தகப்பன்சாமி’, ‘எப்போதும் வென்றான்’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நாகர்கோவிலில் துவங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
“இளம் பருவத்தினரின் காதல் கதையை யதார்த்தமான திரைக்கதை உத்திகளினால் குடும்ப பொழுது போக்குப் படமாக உருவாக்குகிறோம்..” என்றார் இயக்குநர் யோகேந்திரன் மகேஷ்.










