full screen background image

“இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவேன்” – இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

“இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவேன்” – இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணின் ‘RC15’ இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று இந்தப் படங்களின் இயக்குரான ஷங்கர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த ‘இந்தியன்-2’ திரைப்படம் பல்வேறு காரணங்களினால் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடைவெளியில் நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் தயாராகும் படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி நள்ளிரவு வெளியானது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

இத்தகைய சூழலில் “ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். மேலும் ‘RC-15’  படத்தின் அடுத்த ஷெட்யூலை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஷூட் செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Hi Everyone, Indian 2 and #RC15 will be shot simultaneously. Ready to shoot the next schedule of #RC15 from first week of September in Hyderabad and Vizag! @DilRajuOfficial @AlwaysRamCharan @SVC_officialpic.twitter.com/20yYQGxIgE

— Shankar Shanmugham (@shankarshanmugh) August 24, 2022

Our Score