இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘குந்தவை’ கதாப்பாத்தில் நடித்ததன் மூலமாக தற்போதைய புதிய தலைமுறை ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார் நடிகை த்ரிஷா.
38 வயதான இந்த ‘மிஸ் சென்னை’ அழகி பட்டம் வென்ற த்ரிஷா தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு முறை திருமணம் நிச்சயமாகி அதுவும் ரத்தாகிவிட்டது. அதற்குப் பின்பு திருமணம் என்ற பேச்சே அவர் வாழ்க்கையில் எழவில்லை.
சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ விழா ஒன்றில் கலந்து கொண்ட த்ரிஷாவிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் “எப்போது திருமணம்?” என்று கேட்டால்கூட பதில் சொல்லுவேன். ஆனால், யாராவது “ஏன் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது.
திருமணத்துக்கு பிறகு விவகாரத்து என்பதை நான் விரும்பவில்லை. விவாகரத்தின்மீது எனக்கு நம்பிக்கையும் கிடையாது. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்து கொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஒருவரைப் பார்த்தவுடன் என்னுடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக் கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்குள் தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் கண்டிப்பாக அவரைத் திருமணம் செய்வேன்…” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
யாருய்யா அந்த அதிர்ஷ்டசாலி..?