செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இ.பி.கோ 302’.
இந்தப் படத்தில் கஸ்தூரி கதையின் நாயகியாக நடித்துள்ளார். நாகசக்தி, வர்ஷிதா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் அறிமுகமாகிறார்கள். மேலும், வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு, போண்டாமணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ்பால், படத் தொகுப்பு – காளிதாஸ், கலை இயக்கம் – மணிமொழியன், சண்டை இயக்கம் – தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்து விஜயன், ராஜ குணசேகரன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர், இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சலங்கைதுரை. இவர் ஏற்கெனவே கரண் நடித்த ‘காத்தவராயன்’ படத்தை இயக்கியவர்.
‘இ.பி.கோ-302’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை கஸ்தூரி பேசும்போது, “தமிழில் நான் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்தப் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். என் கேரக்டரை முதலில் சின்னதாகத்தான் எழுதியிருந்தார்கள். பின் நான் இந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு இந்தக் கேரக்டரை மிக அழகாக டெவலப் செய்துள்ளார் இயக்குநர்.
மேலும், படத்தின் கதை திரைக்கதையை இன்னும் வலிமை வாய்ந்ததாக எனது கேரக்டரை மாற்றியிருக்கிறார் இயக்குநர். இயக்குநர் சலங்கை துரை மிகவும் நேர்த்தியான உழைப்பாளி. நேரத்தை துளிகூட வீணாக்க மாட்டார்.
முக்கியமாக அவரிடம் எந்தக் குழப்பமும் இல்லாமல் வேலை செய்ய முடியும். அவரின் கடும் உழைப்பால் இத்திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். எது காதல் என்பதை இப்படம் பேசியுள்ளது…” என்றார்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.