நாடே தீபாவளி ஃபீவரில் இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் வழக்கம்போலவே சிக்கனமாக எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது என்பது பற்றி யோசித்து வருகிறார்கள்..!
அவர்களின் சுமையில் கொஞ்சத்தை ஏற்றுக் கொள்ளும்படியாக பல்வேறு திரையுலக அமைப்புகளும் த்த்தமது உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கி வருகின்றன.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் தமது உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசினை வழங்குகிறது.
நேற்று துவங்கி, நாளைவரையிலும் இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றரை கிலோ இனிப்பு வகைகளுடன், சட்டை, பேண்ட் பிட்டு துணிகளும் இந்த பரிசுப் பட்டியலில் அடக்கம்.
சங்கத்தின் தலைவரான இயக்குநர் விக்ரமன் மற்றும் செயலாளரான ஆர்.கே.செல்வமணியின் சீரிய வழிகாட்டுதலில் சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் இந்த சிறப்பு தீபாவளி பரிசு வழங்குவது தொடர்ந்திருக்கிறது.
பாலிமர் டிவிக்காக ஒரு சிறப்பு சினிமா பட்டிமன்றத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தை வைத்தும், கூடுதலாக சில பெரிய இயக்குநர்கள் பெரிய மனதுடன் அளித்த நன்கொடை பணத்தை சேர்த்தும்தான் இப்படி கிட்டத்தட்ட 1300 சங்க உறுப்பினர்களுக்கு இதனை செய்ய முடிந்திருக்கிறதாம்..!
பாராட்டுக்கள் இயக்குநர்கள் சங்க நிர்வாகத்தினருக்கு..