‘ஆம்பள’ படத்தின் சக்ஸ்ஸ் பிரஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, அடுத்து விஷாலை வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டைப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறினார்.
இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, “விஷாலை வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கும் திட்டம் இருக்கிறது. நிறைய நாடுகள்ல நடக்குற மாதிரி ஒரு கதை இருக்கு. ஆனா நிறைய செலவாகுமேன்னு யோசிச்சுத்தான் அமைதியா இருந்தோம். ஆனா இப்போ இந்த ‘ஆம்பள’ படம் அதற்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதோட வசூலை நினைச்சுத்தான் துணிஞ்சு அடுத்தப் படத்தைத் தயாரிக்க பிளான் செஞ்சிருக்கோம். அந்தப் படத்துக்கான வேலைகள் இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும்.
‘அன்பே சிவம்’ மாதிரியான படங்களை என்னால் இ்பபோதும் இயக்க முடியும். தயாரிப்பாளர் கிடைத்தால் நிச்சயமாக செய்வேன்.
அதேபோல் இந்த ‘ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளர்களான ‘ஹிப்ஹாப் தமிழா’ குழுவின் ஆதியை ஹீரோவாக நடிக்க வைத்து எனது சொந்த பேனரில் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கவுள்ளேன் என்றார்.”