full screen background image

அரசியலில் ஈடுபட ரஜினிக்கு என்ன தகுதி இருக்கு..? – இயக்குநர் சீமானின் கோபம்..!

அரசியலில் ஈடுபட ரஜினிக்கு என்ன தகுதி இருக்கு..? – இயக்குநர் சீமானின்  கோபம்..!

அண்ணன் சீமானுக்கு ரஜினியை வம்புக்கு இழுக்கவில்லையென்றால் தூக்கமே வராது போலிருக்கிறது..!

அரசியலில் தலையெடுத்த காலத்தில் இருந்தே இயக்குநர் சீமான் சூப்பர்ஸ்டார் ரஜினியை கடுமையாக விமர்சித்தே வருகிறார். அது முழுக்க முழுக்க ரஜினி பிறப்பால் கன்னடர் என்கிற அர்த்தத்திலும்,  அவர் வெறும் நடிகர் மட்டுமே.. அவருக்கு அரசியல் செய்யத் தகுதியில்லை என்பதாகவுமே இருக்கிறது..!

இன்றைய ‘ஆனந்தவிகடனி’லும் இந்த மாத கோட்டாவை போல ரஜினியை விமர்சித்திருக்கிறார்.

“சினிமால இருந்து வந்திருக்கும் நீங்களே முதலமைச்சராக ஆசைப்படும்போது, அதே சினிமாவில் இருந்து இன்னொருத்தர் அரசியலுக்கு வர்றதை ஏன் எதிர்க்குறீங்க..? அதுவும் தமிழ்நாட்டில் ரஜனி மேல ஆளாளுக்கு ஏன் பாயுறீங்க..?” என்ற சரியான கேள்விக்கு மிதப்பான பதிலை அளித்திருக்கிறார் இயக்குநர் சீமான்.

இது சீமானின் பதில்  : “யாரையும் அரசியலுக்கு  வரக் கூடாதுன்னு நான் சொல்லலை. ரஜினி ஏன் அரசியலுக்கு வரணும்..? அதுதான் என் கேள்வி.. எல்லாரும் அவருக்குத்தான் அரசியலுக்கு வர தகுதியிருக்கு. அவரைவிட்டால் இங்கே வேற யாருமே இல்லைங்கிற மாதிரி சொல்றாங்களே.. அது என் இனத்தின் தன்மானத்துக்கு இழுக்கில்லையா..?

தன்னைத் தாழ்த்திக் கொள்ளாதவன் தலைவனாக மாட்டான். தலைவனாக வருபவன் பசி, தூக்கம் மறந்திருக்கணும். தன்னையும் மறந்து இருக்கணும். பணம், பதவி, புகழ் போதை எதற்கும் அடிமையாகாமல் இருக்கணும்.. இதுல எந்தெந்த குணம் அவர்கிட்ட இருக்கு..?

அமீர் சொல்றார்.. ‘ரஜினி மேல ஒரு கிளீன் இமேஜ் இருக்கு’ன்னு..! என்னத்த கிளீன் இமேஜ் இருக்கு..? ‘சினிமால நடிச்சு வாங்கின சம்பளத்துல ஒரு ரூபாய்கூட வரி  ஏய்ப்பு செய்யாமல் பணம் கட்டியிருக்கேன்’னு ரஜினியால் சொல்ல முடியுமா..? கல்யாண மண்டபம் கட்டி அறக்கட்டளைன்னு ஆரம்பிச்சாலே வரி ஏய்ப்புன்னுதானே அர்த்தம்?

இந்த மண்ணை ஆளும் உரிமை இந்த மண்ணில் பிறந்த மக்களுக்குத்தான் இருக்கு. ரஜனிதான் வந்து சேவை செய்யணும்னு இங்கே எதுவுமே இல்லை..

அட… நான் முகமது பின் துக்ளக் மாதிரி ஒரு முட்டாப் பய மாதிரியே ஆட்சி பண்ணிட்டுப் போறனே..! ஆனா நீங்க ஆட்சி செய்யக் கூடாது.. எங்க மண்ணை நாங்க பார்த்துப்போம்.

இங்கே வாழும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை எங்களுக்கே உண்டு. நான் சொல்றது யாருக்கு நல்லா புரியுதோ இல்லையோ.. ரஜினிக்கு நல்லாவே புரியும்.

அவர் இன்னும் 10 படங்கள் நடிக்கட்டும். ஒவ்வொரு படத்தையும் 300 கோடிக்குக்கூட வியாபாரம் பண்ணட்டும். அதுக்கெல்லாம் நாங்க எதுவும் சொல்லலை.. ஆனா அரசியலுக்கு ரஜினி அவசியமில்லை..”

– ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதற்கு சீமான் யார்..? இவருக்கு யார் இந்த மறுதலிக்கும் அதிகாரத்தைக் கொடுத்ததுன்னு தெரியலை..!

“யாரையும் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு நான் சொல்லலை” என்று சொல்லிவிட்டு, அடுத்த வரியில் “ரஜினி ஏன் அரசியலுக்கு வரணும். இதுதான் என் கேள்வி..” என்கிறார். இதென்ன முட்டாள்தனமான பதில்..!? ரஜினியைத் தவிர மத்தவங்களையெல்லாம் கேட்க மாட்டாராம். ரஜினியை மட்டுமே கேட்பாராம்..

அப்போ நீங்க மட்டும் ஏண்ணே அரசியலுக்கு வந்தீங்க..?

Our Score