full screen background image

க்யூப் சர்ச்சை – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எழுப்பியிருக்கும் காரசாரமான கேள்விகள்..!

க்யூப் சர்ச்சை – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எழுப்பியிருக்கும் காரசாரமான கேள்விகள்..!

தமிழ் சினிமா துறையில் தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர்களின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தினால் தியேட்டர்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஈகோவுக்காக தியேட்டர் உரிமையாளர்களும், க்யூப் நிறுவனமும் இணைந்து இப்போது தியேட்டர்களை நடத்தி வருகின்றனர்.

புதிய படங்கள் கிடைக்காமல் பழைய படங்களையும், ஆங்கில படங்களையும், வேற்று மொழி படங்களையும் வெளியிட்டு வீம்புக்காக தியேட்டர்களை நடத்தி வருகின்றனர். அப்படியும் மால் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 25 பேர், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் 10 பேர் என்றுதான் வருகிறார்களாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரோகிணி பன்னீர்செல்வம் தங்களது சங்க உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோ செய்தியில் “வெற்றி எப்படியும் நம் பக்கம்தான் வரும். யாரும் VPF-க்கு பணம் கட்ட வேண்டாம். அது நம் வேலையல்ல…” என்று சொல்லியிருந்தார்.

இதற்கு பதிலளித்து இன்றைக்கு பெப்சி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆடியோ செய்தியில் ரோகிணி பன்னீர்செல்வத்திடம் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார். 

அதில் ஆர்.கே.செல்வமணி கேட்டிருக்கும் கேள்விகள் இது :

qube-digital-provider

“தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் அவர்களுக்கு,

இப்போது உங்களுடைய சக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கு சில விஷயங்களை நீங்கள் சொன்னீர்களா என்று தெரியவில்லை.

VPF கட்டணம் என்பதில் தியேட்டர் கட்டணமும் சேர்ந்துதான் உள்ளது என்பதை உங்களது சங்க உறுப்பினர்கள் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறீர்களா..?

சத்யம் போன்ற மெகா மால்களில் VPF-க்காக 27,500 ரூபாயை கட்டும்போது, அதில் 22000 ரூபாயை அந்தத் தியேட்டர்காரங்க வாங்கிக்கிறாங்களே..? அதை நீங்கள் மற்ற உறுப்பினர்களிடத்தில் சொல்லியிருக்கிறீர்களா..?

க்யூப் நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் வாங்குகிற VPF கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை, ஒரு சில குறிப்பிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்களே.. அதை நீங்கள் கேட்டதுண்டா..?

ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் எங்களிடம் சொல்கிறார்கள்.. ‘நாங்களே சொந்தமாக க்யூப் சிஸ்டத்தை வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் இதுவரையிலும் எங்களிடம் க்யூப் சிஸ்டம் ஒரு பைசாகூட தந்ததில்லை’ என்று..! ஆக, க்யூப் நிறுவனம் உங்களது சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டு, நிறைய பேருக்கு தராமல் இருக்கிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா..?

இப்போது க்யூப் நிறுவனம் தியேட்டர்களில் வைத்திருக்கும் சிஸ்டத்திற்காக இதுவரையிலும் எவ்வளவு ரூபாய் தயாரிப்பாளர்களிடத்தில் வசூல் செய்திருக்கிறது. அந்த வசூல் இந்நேரம் க்யூப் சிஸ்டத்தை சொந்தமாக வாங்கி வைத்திருந்தால், அந்தத் தொகையை தாண்டியிருக்குமே..? இதை என்றைக்காவது அவர்களிடத்தில் சொன்னதுண்டா..?

rohini-panneerselvam-1

நீங்கள் இப்போது உங்களது உறுப்பினர்களிடத்தில் ‘VPF கட்டணத்திற்கு பணம் கட்ட வேண்டாம்’ன்னு சொல்றீங்க.. க்யூப் நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் ஒப்பந்தம் போடும்போது அவர்களது சங்கத்தின் பொதுச் செயலாளர் என்கிற முறையில் நீங்கள் அந்த ஒப்பந்தத்தை வாங்கி அதைப் படித்ததுண்டா..?

இது மாதிரியான ஒரு அடிமை சாசனத்தில்.. லீகலா… பாண்ட்ல எழுதிக் கொடுத்து மீள முடியாத அளவுக்கு உங்களது சங்க உறுப்பினர்கள் மாட்டிக்கிட்டாங்களே.. அவங்களை காப்பாற்ற நீங்கள் முயற்சி எடுத்ததுண்டா..?

எல்லாருமே தவறான ஒருதலைப்பட்சமான அக்ரிமெண்ட்டா போட்டிருக்காங்களே.. அதை என்றைக்காவது நீங்கள் கேட்டதுண்டா..?

‘இனிமேல் அந்த அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போடும்போது என்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க’ என்று திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லியிருக்கீங்களா..?

“இப்போது தவறான முறையில் அக்ரிமெண்ட் போட்டுட்டாங்க. இனிமேல் அக்ரிமெண்ட் போடும்போது, அதைப் படிச்சுப் பார்த்துட்டு சரியான முறையில இருக்குற மாதிரி அக்ரிமெண்ட் போடுவோம்”ன்னு சொல்லியிருக்கீங்களா..?

க்யூப் நிறுவனத்தின் புரொஜெக்டரோட விலை என்னன்னு என்னைக்காச்சும் யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா..?

r.k.selvamani-1

‘பல்பு மாத்துறாங்க’.. ‘பல்பு மாத்துறாங்க’ன்னு சொல்றீங்களே..! அந்த பல்போட விலை என்னன்னு உங்களுக்கு தெரியுமா..?

‘பல்பு மாத்தியிருக்கோம்’னு அவங்களை சொல்லும்போது, விளம்பரக் கட்டணத்துல 40, 50 சதவிகிதமெல்லாம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சரியாக வருகிறதா என்று என்றைக்காவது சோதித்திருக்கிறீர்களா..?

பல திரையரங்கு உரிமையாளர்கள் விளம்பரக் கட்டணத்தில் தங்களுடைய பங்கு எதுவும் வரலைன்னு சொன்னாங்க. அப்போ மேல இருக்குற ஒரு சிலருக்கு மட்டும் விளம்பரக் கட்டணத்தில் கொஞ்சம் வாங்கிக் கொடுத்துவிட்டு, மற்ற பெரும்பான்மையான சங்க உறுப்பினர்களுக்கு க்யூப் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிக் கொடுக்காமல் ஏமாத்தியிருக்கீங்க..?

மொதல்ல உங்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தவித நன்மையுமே செய்யாமல் விட்டுட்டு.. சங்கப் பதவியிலேயும் இருந்துக்கிட்டு.. ‘இப்போ பணம் கட்டாதீங்க.. பணம் கட்டாதீங்க’ன்னு உங்க உறுப்பினர்கள்கிட்ட சொல்ற நீங்க இந்த தமிழ் சினிமா துறை நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா.. இல்ல… க்யூப் நிறுவனம் மட்டும் நல்லாயிருக்கணும்னு நினைக்குறீங்களா..?

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துறதுல குறியா இருக்குற நீங்க.. நமக்குச் சம்பந்தமே இல்லாத க்யூப் சினிமாகிட்ட தயாரிப்பாளரோட இவ்வளவு பணம் இருக்கு. 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புரொஜெக்டருக்கு இதுவரைக்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலும் கலெக்சன் பண்ணியிருக்காங்க. ஆனால் அந்த புரொஜெக்டர் இப்பவும் அவங்களுக்குச் சொந்தமாகவில்லை என்கிற உண்மையை அவங்ககிட்ட சொல்லியிருக்கீங்களா..?

இல்லைன்னா.. எதிர்காலத்துல தயாரிப்பாளர்கள் பணம் கட்டும்போது அந்த புரொஜெக்டர் உங்களுக்காச்சும் சொந்தமானதாக இருக்கணும் இல்லையா..?!

இப்போ வெறும் 10 சதவிகிதம்பேர்தான் க்யூப் புரொஜெக்டரை சொந்தமா வைச்சிருக்காங்க. இப்போ தயாரிப்பாளர்களிட்ட வசூலித்த பணம் நியாயமா தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் சேர்ந்திருந்தால், இவர்களைப் பார்த்து மற்றவர்களும் புரொஜெக்டரை சொந்தமா விலைக்கு வாங்கி… இப்போ தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தத் தியேட்டர்களிலும் சொந்த புரொஜெக்டர் இருக்குற மாதிரி மாறியிருக்குமே..?

இதை ஏன் நீங்கள் செய்யவில்லை..?”

என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

Our Score