full screen background image

இயக்குநர் பா.ரஞ்சித் 3 நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் 5 திரைப்படங்கள்

இயக்குநர் பா.ரஞ்சித் 3 நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் 5 திரைப்படங்கள்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,  கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன்  இணைந்து 5 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளார்.

இந்த ஐந்து திரைப்படங்களை லெனின் பாரதி, சுரேஷ், மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகியோர் இயக்கவுள்ளனர். இந்த 5 படங்களும் மிக பெரிய திரை வெளியிட்டிற்காக  திட்டமிடப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் படப்பிடிப்பில் தனது இரண்டாவது படத்தை முடித்த பின்னர் இது மாரி செல்வராஜின் 3-வது படமாகவும், விஜய் சேதுபதி தயாரித்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்திற்குப் பிறகு லெனின் பாரதியின் 2-வது படமாகவும் இருக்கும்.

மேலும்  இந்த படங்கள் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளன.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விமர்சனத்திலும், வணிக ரீதியிலும் பெரும் வெற்றியைப் பெற்றவை.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இரண்டு முறை இயக்கிய இளம் இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித், ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ போன்ற காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

pa.ranjith

பா.ரஞ்சித் தயாரிப்பாளராக தனது பங்கைப் பற்றி பேசும்போது, “சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன் பேசக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது. மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம்.

நான் தயாரித்த முதல் இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்  . இந்தத்  திரைப்படங்களுக்கான கதைகள் மற்றும் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

கதை சொல்வது என்பது வெகுஜனங்களுடன் தொடர்பு கொள்வது பற்றியது, நான் இறுதியாக இந்த கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்த் திரையுலகம் இந்தியாவின் பல திரைப்படத் துறைகளைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். பிற மொழிகளில் உள்ள அனைத்து இந்திய படங்களுக்கும் மொத்த பாக்ஸ் ஆபிஸ் பங்களிப்பில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 சதவீதம்வரை பங்களிப்பு செய்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய அளவுக்கான உள் நாட்டு சந்தையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளின் வெளிநாட்டு திரைப்பட சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வணிக வசூலைத்  தக்க வைத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தி படங்களைப் போலவே, நம் தமிழ் திரைப்படங்களான ‘வட சென்னை’, ‘96’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பெரிய மதிப்பை பெற்றுள்ளது.

image (13)

லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின் விளம்பரதாரர் மற்றும் இயக்குனரான அதிதி ஆனந்த் இது பற்றிக் கூறுகையில், “நான் எப்போதுமே பா.ரஞ்சித் என்கிற இயக்குநரின் ரசிகர். .ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவரது அர்ப்பணிப்பால் நான் திகைத்துப் போயிருக்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் என்னை ஆச்சரியப்பட செய்தார். மேலும், அது போன்ற ஒரு தரமான திரைப்படத்தை மீண்டும்  பா.ரஞ்சித் மற்றும் எங்கள் அற்புதமான, திறமை வாய்ந்த  இயக்குநர்கள் மூலம் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்…”

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் என்பது சிங்கப்பூரைச் சேர்ந்த விஸ்டாஸ் மீடியா கேபிட்டலின் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும், இது பியுஷ் சிங் மற்றும் அபயானந்த் சிங் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்நிறுவனம் திரைப்படங்களை வெளியிட உள்ளது.

‘Maadathy- An unfairy Tale’, மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘போன்ஸ்லே’, அபய் தியோல் மற்றும் பங்கஜ் கபூர் நடித்த ‘ஜே.எல்.50’ மற்றும் ஏ.பி.விக்ரம் கோகலே மற்றும் அமிதாப்பச்சன் நடித்த மராத்தி திரைப்படமான ‘ஏபி ஆனே சி.டி.’ என்று இந்நிறுவனம் 12 திரைப்படங்களை வரிசையாக வெளியிடவுள்ளது.

அவை அனைத்தும் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன, மேலும் இந்த நிறுவனம் சமீபத்தில் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது.

image (1)

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அபயானந்த் சிங் இது பற்றிக் கூறுகையில், “வணிக மற்றும் விமர்சன வெற்றிகளுக்கு இடையில் ஒரு நல்ல சமநிலையை அடைவதற்கான புதிய திறமைகளை இது காண்கிறது என்பதால் நாங்கள் எப்போதும் தமிழ்த் திரைப்படங்களை பன்முகப்படுத்த விரும்புகிறோம்.

புதிய இயக்குநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய படங்களை உருவாக்குவதில் பா.ரஞ்சித் போன்ற ஒருவரை இதற்கான தலைமையில் வைத்திருப்பது இன்னும் சுவாரஸ்யமானது…” என்றார்.

Our Score