full screen background image

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே.பாக்யராஜ்!

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே.பாக்யராஜ்!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும் படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை படத்தில் வைத்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால், எந்த ஒரு  விசேஷமான காரணமும் இல்லை.

எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும்போது எனக்கு முருங்கைக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். என் கூட சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார்.  இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். “இது உனக்குப் போதும். இரண்டுக்கு மேல் வேண்டாம். இது போதும்…”  என்பார் பாட்டி.

எப்போதும் வேண்டாம் என்பதில்தான் நம் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் என்னை மாதிரியான சின்னப் பிள்ளைகளோடு அதிகமாக விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது.

விளையாட்டாகத்தான் இதை ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வைத்தேன். அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் இந்த முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.” என்றார்.

Our Score