full screen background image

சென்னையில் தொடங்கிய ‘சோழ நாட்டான்’ படப்பிடிப்பு!

சென்னையில் தொடங்கிய ‘சோழ நாட்டான்’ படப்பிடிப்பு!

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர்’ மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படம் ‘சோழ நாட்டான்’.

இப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை  எஸ்.ஆர். சதீஷ்குமார் கையாள,  எஃப். எஸ். ஃபைசல் இசையமைத்து வருகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா பேசும்போது “தஞ்சாவூரில் தொடங்கும் இப்படத்தின் கதை சென்னையில் தொடர்கிறது. ரேக்ளா பந்தயத்தோடு நில்லாமல் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு மிகப் பிரபலமான நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதும் திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்,” என்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

Our Score