நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கும் ‘கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது..!
இந்தக் ‘கேப்டன்’ திரைப்படத்தை Think Studios நிறுவனம், நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.
இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
D.இமான் இசையமைக்க, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E.ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டை இயக்கம் செய்துள்ளார். S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும்படி அமைந்துள்ளது.
நம்ப முடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக் குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது.
கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தர வேண்டும் என்பதே ஆகும் என்கிறது படக் குழு.
தவிர, இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது. ரத்தம் சூடு பிடிக்கும் பரபர திரில் சவாரியாக இப்படம் இருக்குமாம். இந்தப் படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்யா எனும் அற்புதமான நடிகர் இந்தக் ‘கேப்டன்’ படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக் குழுவும் சொல்கிறது, மேலும், இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திர தோற்றத்தை வெளியிட படக் குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘டெடி’ என்ற பிரம்மாண்டமான வெற்றி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.