full screen background image

“மிஷ்கின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்” – அறிமுக இயக்குநருக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவுரை!

“மிஷ்கின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்” – அறிமுக இயக்குநருக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவுரை!

ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M.போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜே.பி. இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘BP-180’.

இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, K.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – ATUL INDIA MOVIES, தயாரிப்பாளர் – அதுல் M போஸமியா, எழுத்து இயக்கம் – ஜேபி,  இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – ராமலிங்கம், கலை இயக்கம் – A.R.மோகன், எடிட்டிங் – இளையராஜா, புரடக்சன் எக்ஸ்க்யூட்டிவ் – திருநீலகண்டன், மேக்கப் – ராம் பாபு,  உடை வடிவமைப்பு – நாகா சத்யா, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – 8B STUDIOS, பத்திரிகை தொடர்பு – சதீஸ் (AIM).

இப்படத்தின் பூஜை நிகழ்வு, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M.போஸ்மியா பேசும்போது, “இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச் சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி…” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “அதுல் சார்,  ராட்சசன்’ படத்தைப் பார்த்துவிட்டு “வாங்க.. நாம ஒரு படம் பண்ணலாம்” என்றார். இயக்குநர் ஜே.பி.யை என்னிடம் அனுப்பினார். அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதைக்குப் பொருத்தமான டைட்டில் இதுதான். படத்தை இப்போதுதான் துவக்கியுள்ளோம். முடிந்த பிறகு இன்னும் நிறைய பேசலாம்.” என்றார்.

நடிகை நைனி சாவி பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பினை தந்ததற்கு ஜே.பி. சார் மற்றும் படக் குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள்…” என்றார். 

நடிகர் அருள்தாஸ் பேசும்போது, “வெளிமாநிலத்திலிருந்து இங்கு படம் தயாரிக்க வந்துள்ள, தாயரிப்பாளர் அதுல் அவர்களுக்கு வாழ்த்துகள், படத்தின் கதையைக் கேட்டேன்.  படம் ஆக்சன் படமாக இருக்கும். பாக்யராஜ் சார் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் நன்றாக வரும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.

நடிகர் டேனியல் பாலாஜி பேசும்போது, “என்னை எப்படி இந்தப் படத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை, இந்தக் கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.  உங்களுக்குப் பிடிக்குமாறு படம் செய்வோம். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி…” என்றார்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மிகப் புதுமையான ரோல் கிடைத்துள்ளது. க்ரைம் திரில்லர் கதைதான். ஜே.பி. சார் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி…” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன்முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜே.பி. இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்தக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இந்தக் கதையை 40 கதைகள்  கேட்ட பின்னர் இந்தக் கதையை ஓகே செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும்தான் நிறைய வேலைகள் இருக்கின்றன. கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும்போது ஒரு டைட்டில் சொன்னார். ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில்தான் இந்தப் படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும்வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜே.பி. என்று நம்புகிறேன்..” என்றார்.

இயக்குநர் ஜே.பி. பேசும்போது, “இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி.  எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன்.  இந்தப் படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன்.  இதன் மதிப்பு எனக்குத் தெரியும். இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார்.

Our Score