full screen background image

பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக் கூடிய வெற்றி படங்களாகவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G.டில்லி பாபுவின் Axess Film Factory  நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன்  முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் இருவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே வெற்றி மாறனின் பாவக் கதைகள் ஆந்தாலஜி’ மற்றும் பரத்தின் ‘காளிதாஸ் ‘ படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபல படத் தொகுப்பாளர் ரூபனிடம் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களில்  உதவியாளராகப் பணியாற்றிய R.கலைவாணன் இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார்.

கலை இயக்குநர் ராஜீவனின் உதவியாளர் மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார்.

தற்போதைக்கு Production No-12’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்குகிறார்.

சமீபத்தில் இவர் இயக்கியிருந்த அபிமன்யூ’ என்ற குறும்படம் திரை உலகில் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

இந்தப் புதிய திரைப்படம் குறித்துத் தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேசும்போது, “இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறியபோது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும்விதமும் மிகவும் புதிதாக இருந்தது.

நகருக்கு வெளியே இருக்கும் காற்றாடி விண்ட் மில்லை சுற்றியே மொத்தக் கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முழுத் திரைக்கதையையும் படித்த பின்னர்தான் படத்தை தயாரிக்கவே சம்மதித்தேன்.

திரைக்கதையை படித்தபோது பல இடங்களில் மிக அழுத்தமான கதையமைப்பும்,  மர்மமும் கலந்து இருந்தது. மயிர்க்கூச்செரியும் பல தருணங்கள் திரைக்கதையில் இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது. அதுவே எனக்கு இந்தப் படத்தை தயாரிக்கும் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது.

பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோரை முன்னணி பாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என இயக்குநர் சொன்னபோது இப்படத்திற்கு கச்சிதமான தேர்வு என எனக்கும் தோன்றியது. பரத் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நாயகன். வாணி போஜன் எங்களின் மிகப் பெரிய ஹிட் படமான ஓ மை கடவுளே’ படத்தில் நடித்திருந்தார். அற்புதமான நடிகை அவர். அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்து விரைவில் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்…” என்றார்.

Our Score