ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘அய்யனார் வீதி’ தற்போது திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது .
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புரட்சி திலகம் K.பாக்யராஜ், பொன்வண்ணன் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாரா ஷெட்டி, சிஞ்சு மோகன் அறிமுகமாகிறார்கள்.
மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – U.K.முரளி, படத் தொகுப்பு – சுரேஸ் ஆர்ஸ், பாடல்கள் –பிரியன், நடனம் – சிவராஜ் சங்கர், சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, மக்கள் தொடர்பு – செல்வரகு, கதை – பாஸ்கரன், இணை தயாரிப்பு – விஜயசங்கர், தயாரிப்பு – P.செந்தில்வேல், திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜிப்ஸி N.ராஜ்குமார்
இப்படத்தில் 5 பாடல்கள் இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர், மேலப்பூங்குடி, குற்றாலம், கொடைக்கானல், சொக்கலிங்கபுரம், சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
படம் பற்றி பேசிய இயக்குநர் N. ராஜ்குமார், “பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்குத்தான் உண்டு.
அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம், அசிங்கம், இரட்டை அர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு… வீரம்… அளவான கோபம்… இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவச குண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை துண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோக அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம்.
நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக சொல்வதுதான் இந்த ‘அய்யனார் வீதி’ திரைப்படம்.
கதையை கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
ஊரைக் காக்கும் ‘அய்யனார் சாமி’யை பற்றி 108 மந்திரங்கள் அடங்கிய பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். நட்பு, அன்பு, பாசம் அனைத்தும் இன்னமும் கிராமங்களில் மறையாமல் இருக்கிறது என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்.
பிரம்மாண்ட செலவில் இந்த படத்தை தயாரித்ததோடு, படத்தில் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர் P.செந்தில்வேல்.
தணிக்கை அதிகாரிகளால் பாராட்டுதலுக்குட்பட்ட இத்திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்து தணிக்கை குழு சிறப்பித்துள்ளது.
இத்திரைப்படம் தமிழகமெங்கும் வரும் மார்ச் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது..” என்றார் பெருமையோடு..!