பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பாக டி.சிவகுமார் தயாரிக்கும் திரைப்படம் ‘அதிபர்’.
இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மற்றும் தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், சரவண சுப்பையா, பாரதி கண்ணன், சங்கிலி முருகன், பாவா லட்சுமணன், மதன் பாப், வையாபுரி, சம்பத்ராம், மோகன்ராம், திருமாவளவன், ரேணுகா, கோவை சரளா, அழகு, கவிதா பூஜாரி, கோவை செந்தில், மாயி சுந்தர், தெனாலி, சுருளி, ஸ்டில் குமார்ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார்.
இசை – விக்ரம் சிங்கா
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை – M.G.சேகர்
நடனம் – சிவசங்கர், தினேஷ்
ஸ்டண்ட் – கனல்கண்ணன்
எடிட்டிங் – சஷிகுமார்
தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம்
இணை தயாரிப்பு – P.B. சரவணன்
தயாரிப்பு – T.சிவகுமார்.
எழுத்து, இயக்கம் – சூர்யபிரகாஷ். [இவர் ‘மாயி’, ‘திவான்’, ‘மாணிக்கம்’ போன்ற படங்களை இயக்கியவர்.]
படம் பற்றி பேசிய இயக்குநர் சூர்யபிரகாஷ், “செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது என்ற கொள்கையுடன் வாழும் ஹீரோ சிவா கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.