நடிகை அஞ்சலி புதிதாக தெலுங்கு, கன்னடப் படங்களை ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார் என்பதையும், கூடிய விரைவில் தமிழுக்கும் வரப் போகிறார் என்றும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின..!
இதைப் படிததவுடன் ஆவேசப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம் “அஞ்சலி எப்போது கோடம்பாக்கத்தில் கால் வைத்தாலும், முதலில் என்னுடைய ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்துவிட்டுத்தான் அடுத்தப் படத்துக்குப் போக வேண்டும்” என்று கூறியதை இந்தப் பதிவில் கூறியிருந்தோம்.
இப்போது இதற்கும் நடிகை அஞ்சலி தரப்பில் இருந்து இன்றைக்கு பதில் வந்துள்ளது. எதற்கும் தயார் என்றுதான் தனது பதில் சொல்லியிருக்கிறார் அஞ்சலி.
dear all,
I am completely problem free now n finished my Telugu movie shoot without any problem n starting Kannada movie with puneeth rajkumar. As I heard no one can stop my movie shoots, every one knows that i never do any mistake so that they are supporting me n helping me. Now Who ever want to make movies with me pls don’t worry I wll justify my roles as before n always.
Thank you
‘விட்டேனா பார்’ என்கிறார் இயக்குநர் களஞ்சியம். ‘முடிந்ததை செய்’ என்கிறார் நடிகை அஞ்சலி..!
இவங்க நொச்சு தாங்காம நம்ம பஞ்சாயத்து பாலிடாலையே குடிச்சாலும் இவங்க அக்கப்போர் தீராது போலிருக்கே..?!