ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அகத்திணை’.
இதில் கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், ‘லொள்ளு சபா’ மனோகர், சுவாமிநாதன், நளினி, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ராமச்சந்திரன், பிளாக் பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வா வாசு, மாஸ்டர் ஆதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – அகிலன் [இவர் ‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்]
பாடல்கள் – வைரமுத்து
இசை – மரியா மனோகர்
எடிட்டிங் – G. சசிகுமார்
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு – ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – U.P.மருது. [இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அத்திப்பூகள்’ என்ற தொடரை இயக்கியவர்.]
அகத்திணை படம் பற்றி பேசிய இயக்குநர் யு.பி.மருது, “காதலுக்காக எதையும் இழக்கலாம். காதலை தவிர…’ என்பதை உணர்வுபூர்வமாக சொல்லக் கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதையே இந்த ‘அகத்திணை’.
பழந்தமிழ் இலக்கிய நூலான ‘அகத்திணை’யில் காதல் பற்றி பாடப்படுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று இந்தப் படத்திற்கும் ‘அகத்திணை’ என்று பெயர் வைத்தோம்.
படத்தில் பாடல்கள் அனைத்தையும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதி இருக்கிறார். அதில் தந்தைக்கும் மகளுக்குமான உறவை, அன்பை, பாசத்தை மிக அழகாக சொல்லும் ஒரு பாடல் அனைத்து அப்பா, மகள்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்றது.
படம் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய மனதை தொட்ட உணர்வுபூர்வமான காதல் கதை என்று பாராட்டி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் விரைவில் வெளிவர இருக்கிறது..” என்றார்.