full screen background image

குடிபோதையில் தள்ளாடிய நடிகை சாவித்திரி…

குடிபோதையில் தள்ளாடிய நடிகை சாவித்திரி…

‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் நடிப்புத் திறன் அனைவரும் அறிந்தது. அதேபோல் அவரது திரையுலக வாழ்க்கை வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்ததற்குக் காரணம் அவரிடம் இருந்த அதீதமான குடிப் பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அவருடைய குடிப் பழக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஏ.எல்.எஸ்.வீரைய்யா சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் இது பற்றிச் சொல்லும்போது, “அரசு சார்பில் ஒரு விழாவை துறைமுகத்தில் ஒரு கப்பலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்ச்சுரல் விழா என்று சொல்லி நடிகர், நடிகைகளை அழைத்து வரச் சொன்னார்கள். நாங்களும் அனைத்து நடிகர், நடிகைகளும் அழைத்து வருவதாகச் சொல்லியிருந்தோம்.

அன்றைக்கு சாவித்திரியால் மட்டுமே நடந்து வர முடியவில்லை. அந்த அளவுக்கு குடித்திருந்தார். கடைசியாக அந்த நிலைமையிலும் காரில் வந்தவரை நான்தான் வரவேற்றேன். காரில் இருந்து இறங்கிய அவரை என் தோள் மீது தூக்கி வைத்து லிப்ட்டில் மேலே கொண்டு சென்றேன்.

அங்கே அவருடைய நிலைமை யாருக்கும் தெரியாத அளவுக்கு சேரில் அமர வைத்து ஒரு மாதிரியாக பேசி சமாளித்து அவரைத் திரும்பவும் அனுப்பி வைத்தேன்.

குடியைத் தவிர மற்றபடி பார்த்தால் சாவித்திரி மாதிரி ஒரு பண்பான நடிகையை பார்க்கவே முடியாது. அவர் யார் மீதாவது பாசம் வைத்து பேசிவிட்டால் கடைசிவரையிலும் அது போலவேதான் இருப்பார். அவ்வளவு நல்ல மனுஷி…” என்றார் வீரைய்யா.

Our Score