full screen background image

நடிகை ரோஜா கத்தியால் வெட்டப்பட்டார்..! ஆந்திர கோவிலில் பரபரப்பு..!

நடிகை ரோஜா கத்தியால் வெட்டப்பட்டார்..! ஆந்திர கோவிலில் பரபரப்பு..!

தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர மாநில நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் ஜாத்திரை திருவிழா என்ற விழா நடைபெற்றது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவின் இறுதி நாளான நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, குண்டாலம்மா ஆகிய தெய்வங்களை வீதிஉலாவாக எடுத்து வந்தனர்.

இந்த விழாவில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா கலந்து கொண்டார். அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு வந்தார். இந்தவிழாவில் நகரி முன்னாள் எம்.எல்.ஏ. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணநாயுடுவும் ஊர்வலமாக வந்தார்.

அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்லும் முன் அம்மனுக்கு பூஜை நடத்தப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் மரியாதை அளிப்பது அந்த ஊர் மற்றும் கோவிலின் வழக்கமாம். அதன்படி தற்போதைய எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு மரியாதை அளிக்க முடிவு செய்தபோது இதனை தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்திருக்கின்றனர்.

அதே ஊரைச் சேர்ந்த கிராம பெரியவர் ஒருவருக்குத்தான் முதல் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு  போலீஸ் தடியடிவரைக்கும் சென்றுள்ளது.

அப்போது நடிகை ரோஜாவிடம் பூஜை தட்டை பூசாரியிடம் கொடுத்தார். அதனை தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் ஒருவர் தட்டி விட்டிருக்கிறார். மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம நபர் ரோஜாவின் கையை கத்தியால் வெட்டியுள்ளானார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதுகாப்பு அளிக்காத போலீசாரை கண்டித்தும் நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி நடிகை ரோஜாவுக்கு முதல் மரியாதை அளிக்க ஏற்பாடு செய்தனராம்.

அரசியல்வாதிகள் எங்கே நுழைந்தாலும் இதுதான் நடக்கும்..!

Our Score