கடந்த ஆண்டில் வெளியான, யோகிபாபு எமதர்மனாக நடித்த ‘தர்ம பிரபு’ வெற்றிப் படத்தின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள்.
குடும்ப உறவுகளின் வலிமையையும், ஒற்றுமையையும் மேம்படுத்தும்விதமான கதைக் களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக்கும், இயக்குநர் சேரனும் இணைந்து நடிக்கிறார்கள். டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் இரண்டாவது மகளான ஷிவாத்மிகா இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் டேனியல் பாலாஜி, சரவணன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோ மல்லூரி, கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், ‘விஜய் டிவி’ ஜாக்குலின், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, ஜானகி, பிரியங்கா, ‘நக்கலைட்’ தனம் என ஏராளமான நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
ஒரு குடும்ப சித்திரமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்குகிறார். பொர்ரா பாலபரணியின் ஒளிப்பதிவில் , ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ புகழ் சித்துகுமார் இசையமைப்பில், கவிஞர் சினேகன் பாடல்கள் எழுத, ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது.