நடிகர் கிருஷ்ணா ‘கிரகணம்’ படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து இடைவிடாமல் 72 மணி நேரம் நடித்து அசத்தியிருக்கிறார்.
இது பற்றிய பேசிய கிருஷ்ணா, “யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது. மற்றும் ‘விழித்திரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.
தேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18, 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் ‘யட்சன்’ மற்றும் ‘விழித்திரு’ படங்களுக்கும், இரவு நேரங்களில் ‘கிரகணம்‘ படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு ஏப்ரல் 20-ம் தேதி காலை வரையும் சென்றது.
இது நிதமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. எப்போதோ ஒரு முறை நடப்பதுதான். அதனால் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று நடித்துக் கொடுத்தேன். இப்படி ஷூட்டிங், ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனினும் இந்த அலைச்சலாலும், தொடர் உழைப்பினாலும் என் உடல்நிலை கெடாமலும் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினருக்கும் நன்றி…” என்று பணிவுடன் கூறினார்.
உழைப்பே உயர்வு தரும்னு ரொம்ப நம்புறார் போலிருக்கு..!