full screen background image

“தப்பிக்கவே முடியாது..” – ராஜராஜசோழனுக்கு வந்தியத்தேவனி்ன் பதில்

“தப்பிக்கவே முடியாது..” – ராஜராஜசோழனுக்கு வந்தியத்தேவனி்ன் பதில்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் ராஜராஜசோழன் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாம். இதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி குவாலியரில் இருந்து சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து ஜெயம் ரவி, தனது டிவீட்டர் பக்கத்தில், ”பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன்.  மணிரத்தினம் சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும்வரை நான் உங்களை மிஸ் பண்ணுவேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்…” என்று தெரிவித்திருந்தார்.

படத்தில் ராஜராஜ சோழனின் நெருங்கிய நண்பரான கதையின் நாயகன் வந்தியத்தேவனாக நடித்து வரும் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவியின் இந்த டிவீட்டிற்கு தனது டிவீட்டர் பக்கத்தில் சுவையாக பதில் அளித்திருக்கிறார்.

கார்த்தி தன் டிவீட்டில், “இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது..!  நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் – வந்தியத்தேவன்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Our Score