full screen background image

அமரகாவியம்-ஆர்யாவின் சொந்தப் படம்..!

அமரகாவியம்-ஆர்யாவின் சொந்தப் படம்..!

வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா, அந்தப் பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார்.

தனது சொந்த நிறுவனமான ‘The show people’ என்ற  நிறுவனத்தின் மூலம் ஆர்யா தயாரித்திருக்கும் ‘அமர காவியம்’  படத்தின்  இறுதிக்கட்ட படபிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்டது.

பெரும்  வெற்றி பெற்ற ‘நான்’ படம் மூலம் திரை உலகினரின் கவனத்தை ஈர்த்த  ஜீவாஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும்  காதல் கதை இது. ஆர்யாவின் தம்பி சத்யா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக  அறிமுகம் ஆகிறார் மியாஜார்ஜ்.

“காதல் பற்றிய கதைகள் சினிமாக்கள் தோன்றிய காலத்திலிருந்தே வந்து கொண்டுதான் இருக்கிறது. காதல்  ஒரு நூல் இழை போல.. அதை திறம்பட நெய்து பார்ப்பவரை  கவரச் செய்வது ஒரு இயக்குனரின் திறமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும்  ஒரு தனித்தன்மை உண்டு. அதைப் போலவே  ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு style இருக்கும். ‘நான்’ படத்தில் ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் கதையை சொல்லி இருப்பதை போல், முற்றிலும் ஒரு புதிய பாணியை இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பில் கையாண்டிருக்கிறேன்.

நான் பொதுவாகவே கதையை எழுதும்போதே அந்த கதைக்கான களத்தில் இருந்தே, தட்ப வெப்பத்தையும் உணர்ந்து எழுதுவது வழக்கம். கதைக் களம் கதையின் நாயகன் நாயகிக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காகவே  இதுவரை திரையில் கண்டிராத இடங்களை  தேடிப் பிடித்து அங்கெல்லாம் படப்பிடிப்புகளை நடத்தியுள்ளேன்.  நானே ஒளிப்பதிவாளராகவும்  இருப்பது இந்த வகையில் எனக்கு பெரிதளவு உதவியிருக்கிறது.

விஞ்ஞானத்தை போலவோ, மெய்ஞானத்தை போலவோ அல்ல காதல். நாம் அனுபவித்தது, உணர்ந்தது என  வாழ்வில் ஐக்கியமாகி போன  ஒரு உணர்வு. காதலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு, ‘அமர காவியம்’ படத்தில் எல்லோருடைய காதலும் இருக்கும்..” என்கிறார்  படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கர் . 

Our Score