full screen background image

ஆர்த்தி அகர்வால் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்..!

ஆர்த்தி அகர்வால் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்..!

ஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக் கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி அகர்வால், தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.

கடந்தாண்டு பருமனான தனது உடல்  எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அதில் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மருத்துவமனையில்  உயிரிழந்தார்.

ஆர்த்தி அகர்வால் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்த உடனேயே நடிக்க ஒப்பந்தமான படம் ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்'(Operation Green Hunt). நக்சலைட்டுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஆர்த்தி அகர்வால், நக்சலைட்டாக நடித்துள்ளார்.

actress aarthi agarwal

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் குடும்ப பெண்ணாக வரும் ஆர்த்தி அகர்வால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நக்சலைட்டாக மாறுகிறார். இதையடுத்து காட்டுக்குள் வாழும் ஆர்த்தி அகர்வால், தனது சக நக்சலைட்டுகளிடம், காட்டுக்குள் இருந்து போராடும்விதத்தை கைவிட்டுவிட்டு, நாட்டுக்குள் மக்களில் ஒருவராக போறாடா வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வருகிறார்.

அதிரடி ஆக்ஷன்  காட்சிகள் நிறைந்த இப்படத்தினை கான் புரொடக்ஷன்ஸ் சார்பில்,  என்.ஏ.ரஹ்மான் கான் தயாரிக்க, பாரத்  பாரபல்லி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். 

இதில் ஆர்த்தி அகர்வால் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் முகுல் தேவ், ஆதித்யா ஓம், சுப்ரீத் ரெட்டி, போஷனி கிருஷ்ணா முரளி, ஸ்ரீனிவாச ராவ், ஜாலி, ஹர்ஷவர்தன் ராவ், சட்டதென்னா, ரவிகாலே ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ராஜ் சென் இசையமைக்க, சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்குப் பிறகு மீண்டும் சினிமா உலகில் ரீ என்ட்ரி ஆக நினைத்த ஆர்த்தி அகர்வால், இப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளாராம். இப்படத்தின், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து படம் தயாரானபோது, ஆர்த்தி அகர்வால் படத்தை பார்க்க வேண்டும், என்று ஆர்வமாக இருந்தாராம். ஆனால், படம் வெளியாகும் முன்பே/s அவர் மரணமடைந்தது  படக் குழுவினருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஆர்த்தி அகர்வாலின் இறுதிப் படமாக அமைந்த இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரஹ்மான் கான் கூறுகையில், “இந்த ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்’ படம் நக்சலைட்டுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், சென்சார் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும், நடிகை ஆர்த்தி அகர்வால் நடித்த கடைசிப் படம் என்பதால், இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் நடித்து முடித்தவுடன், ஆர்த்தி அகர்வால் தன்னிடம் படத்தை போட்டு காட்ட சொல்லி அடிக்கடி சொல்லுவார். ஆனால், ‘பிறகு போட்டு காட்டுகிறேன்’ என்று கூறி வந்தேன், ஒரு முறை கோபத்தோடு என்னிடம், ‘நான் செத்ததற்கு பிறகு தான் படத்தை போட்டு காட்டுவீங்களா சார்?’ என்று கேட்டார் ஆர்த்தி. அது தற்போது உண்மையாக நடந்துவிட்டது, என்னை உறுத்துகிறது.

அவருடைய  கடைசிப் படத்தை அவரால் பார்க்க முடியாமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது. இருப்பினும், இந்த படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்று வெற்றி பெறச் செய்வதே, எங்கள் படக் குழுவினர் அவருக்கு செய்யும் மரியாதை என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் இசை வெளியீடு  நடைபெற்ற இந்த ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்’ (Operation Green Hunt) படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

Our Score