full screen background image

ஐஸ்வர்யா தத்தா-இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் ‘ஏ-4’

ஐஸ்வர்யா தத்தா-இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் ‘ஏ-4’
 
‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘மாத்தி யோசி’ ஆகிய படங்களை பி.எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் தயாரிப்பாளர் சேகர் சீதாராமன்.
 
இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். ஏ-4 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய படத்தில் இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.
 
ஒளிப்பதிவு – கே.ஏ.ரோமின், கலை இயக்கம் – சிட்டிபாபு, சண்டை இயக்கம் – மிரட்டல் செல்வா, இசை – செந்தமிழ், படத் தொகுப்பு – சுப்ரமணியம், நிர்வாகத் தயாரிப்பு – வி.பி.வேல்ராஜன், நிர்வாக மேலாளர் – ஏ. ஆறுமுகம், பத்திரிகை தொடர்பு –  நித்திஷ் ஸ்ரீராம். 
 
முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற டி.எஸ்.ரவிக்குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தையும் இயக்கியுள்ளார் .
 
இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு தயாரிப்பாளர் சேகர் சீதாராமன், “கதை மிகவும் நன்றாக இருக்கிறது. யாரை ஹீரோவா நடிக்க வைக்கலாம்” என்று கேட்டபோது, இயக்குநர் சற்றும் தயக்கமே இல்லாமல் “நீங்கதான் இந்தக் கதைக்கு பொருத்தமா இருப்பீங்க. நீங்களே நடிக்கலாம்” என்று சொல்லி தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
 
தயக்கம் காட்டிய தயாரிப்பாளரை உற்சாகப்படுத்திய இயக்குநர் தயாரிப்பாளரை பெரும்பாடுபட்டு சம்மதிக்க வைத்து நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.
 
சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Our Score