full screen background image

டிசி – சினிமா விமர்சனம்

டிசி – சினிமா விமர்சனம்

DC CAST & CREW DETAILS

*CAST WITH CHARACTER NAMES

* Lokesh Kanagaraj – Devadas
* Wamiqa Gabbi – Chandra
* Sanjana A.K. – Parvathi
* Kasthuri Raja – Motor Mani
* Thalaivasal Vijay – Arasu
* Krish Dayal – Bhojraj
* Avinash Raghudevan – Kitty
* Jawahar Sakthi – Karuppan
* Sharath Ravi – Chunnilal
* Pranav Teophine – Sebastian
* A. Raajarishi – Singaram
* Balaji Deviprasad – Ashraf
* Attul – Rajarishi
* Manoj Sashi – Manoj
* Kalaiyarasan R. – Raja Manikam
* Franklin Jacob – Franki
* Dileepan K. – Dilip
* Karnaraajaa – DGP
* Baskar R. – Angani
* Vijayalakshmi Veeramani – Vadivu
* Nanthis M. – Angani Son
* Deepam Philipose – Yuvaraj
* Pream K. Seshadri – Saamikannu
* Bigil Siva – Doctor
* Ashraf Mallisseri – Karvachi Kannan
* Samundeeswari J. – Amulu
* Kapil Velavan – E. Kapil
* Raja Raghupathy – Arokiyaraj
* Idayakumar – Yuvaraj Team
* Kaka Gopal – Shop Owner
* Aara Ajith – Vijay
* Shoban Babu – Shoban Babu
* Viraj – Kitty’s Brother
* Nageshwari T. – Arasu’s Wife
* Harish – Arasu’s Son
* Madhesh – Young Devadas
* J. Vaishalini – Ashraf’s Daughter
* D. Naresh – Yuvaraj’s Assistant
* A. Ajith Kumar – Maavatham
* Johnson – Johnson T.
* Deva – Deva
* Hannah – Ashraf’s Wife
* P.S. Gowtham – Police Officer
* Kalai Vembu – Police Officer
* Dhayaram – Police Officer
* Vikash J. – Police Informer
* Kizhakkuvaasi Chanderan – Singer
* Sasi Kumar P.A. – Police Officer
* Sarah Black – Parvathi’s Friend
* Salamon – Parvathi’s Friend
* Nandhini Udayakumar – Saamikannu’s Wife
* V.G. Raajesh (VGR) – Police Officer
* Subramanian Mathavan – Lodge Owner
* Deepak – Warehouse Owner
* Sangeetha – Brothel Girl
* C. Priya Shanmugam – Brothel Girl
* Nithya S. – Brothel Girl
* Sivasankari G. – Brothel Girl
* Tamilarasi – Brothel Girl

*CREW*
• Written & Directed by: Arun Matheswaran
• Produced by Sun Pictures
• Additional Screenplay: Arun Ranjan
• Dialogue: Arun Matheswaran, Franklin Jacob
• Music: Anirudh
• DOP: Mukesh G
• Editor: G K Prasanna
• Associate Editor: Harish Arun M
• Production Designer: Kannan S
• Stunts: PC Stunts
• Costume Designer: Arun Matheswaran
• Costumer: Perumal Selvam
• Make-up: Vinoth Sukumaran
• Stills: Amir
• SFX: Sync Cinemas
• Audiography: Vinay Sridhar
• Atmos mix Assisted: Vignesh Guru (Knack Studios)
• Colorist: Ranga
• DI Lab: Prasad Film Labs
• VFX: Praveen D
• Publicity Designer: Kabilan Chelliah
• Production Controller: D Ramesh Kuchirayar, K.T.S. Swaminathan
• PRO: Riaz K Ahmed, Paras Riyaz

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய முதல் படத்தை மட்டும் குடும்பத்தோடு பார்க்கும் படியாக கொடுத்தவர் அதற்கு அடுத்த படங்களில் எல்லாம் குடும்பத்தோடுகூட பார்க்க முடியாத படமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இந்த ‘டிசி’ என்ற படமும் அடங்குகிறது.

சிறுவயதில் தன்னுடைய சொந்த தாய் மாமன்களையே கொலை செய்த வழக்கு சிறைக்குச் சென்ற தேவதாஸ் என்ற லோகேஷ் கனகராஜ் இப்போது சிறையில் இருந்து வெளியில் வந்து ஒரு ரவுடி கும்பலின் தலைவனாக இருக்கிறார் இந்த கதை நடக்கும் வருடம் 2011.

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இருக்கும் ஒரு கிராமத்தின் அருகே காவல்துறையினர் காண ஆயுதங்களை ஏற்றி வந்த வேலை தாஸ் தலைமையிலான டீம் கொள்ளை அடிக்கிறது அந்த டீமை கண்டுபிடிப்பதற்காக வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம் 11 லட்ச ரூபாய் தன் மடியில் கட்டிக்கொண்டு வந்த ஒரு ஏழை குடியானவர் சிக்குகிறான் அவனிடம் இருந்து அந்த பணத்தை பறிக்கும் பொருட்டு அவனை ஏற்கொண்டரில் சொட்டு தள்ளிவிட்டு போலீஸ் பணத்தோடு தப்பி ஓடுகிறது.

இந்த விஷயம் அறியும் காட்பாதரான தாஸ் அந்த இன்ஸ்பெக்டரை படுகொலை செய்கிறார் இந்த விஷயங்கள் அறிந்து தமிழக போலீஸ் மேலிடம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறது.

ஒருத்தரையான போலீஸ் உயர் அதிகாரியிடம் இந்த வழக்கை ஒப்படைத்து எப்படியாவது அவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிடுகிறார் டிஜிபி இவர் கிடையில் தாஸ் அவரது கூட்டாளிகளும் ஓரிடத்தில் வந்து தங்கி இருக்க அந்த இடத்தில் இருக்கும் ஹோட்டலில் படகியாக இருக்கும் சந்திரா என்ற அஞ்சனம் இது காதல் வருகிறது தாசுக்கு ஆனால் அங்கே நடந்த ஒரு அடிதடியில் கோபமான அந்த லாட்ஜின் உரிமையாளர் இவர்களைப் பற்றி போலீசுக்கு போட்டு கொடுக்க போலீஸ் வந்து துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்க முலுகையில் அந்த சந்திராவும் படுகொலை செய்யப்படுகிறார்.

மேலும் தாசன் டீம் தப்பித்து போகும் பொழுது தங்களை காட்டிக் கொடுத்த அந்த லாட்ஜ் ஓனரை கொலை செய்ய நினைக்கிறார்கள் அதற்காக அவர் வழக்கமாக வருகை தரும் விபச்சார விடுதியில் காத்திருக்கிறார்கள் அவர் வந்தவுடன் அவரை போட்டுத் தள்ள அந்த விபச்சார விடுதியில் 20 வருடங்களாக தொழில் செய்து வந்த பாமக கவியையும் உடன் அழைத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள் இன்னொரு பக்கம் போலீசும் இவர்களை விடாமல் பின் துரத்தி செல்கிறது. இந்த முயல், நரி விளையாட்டில் இறுதியில் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த டிசி படத்தின் திரைக்கதை.

முகத்தை மறைக்கும் அளவுக்கான தலைமுடியும் திராவிட கலரும் ரவுடித்தனமான தோற்றமும் இருந்தாலே போதும் அவன்தான் ஹீரோ என்று தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டு காலமாக எழுதி வைத்து விட்டார்கள் வருகின்ற ஹீரோக்கள் எல்லாம் இதே போன்ற தோற்றத்திலேயே வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் ஏதோ ஒரு காரணத்துக்காக முடியை வளர்த்து தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்திருக்கிறார் அந்த நேரத்தில் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் கண்ணில் பட்டுவிட நீங்கள் தான் என் அடுத்த படத்தின் ஹீரோ என்று அவர் தலையில் மஞ்சள் தடவி அரைத்து அழைத்துச் சென்று விட்டார் அருண் அதன் விளைவுதான் இந்த டிசி படம்.

நான்கு வரி வசனங்களை பேசுகிறார் அடுத்த செகண்டில் சீரட்டை எடுத்து பற்ற வைக்கிறார் பாதி சிகரெட் மடித்தவுடன் மீண்டும் வசனம் பேசுகிறார் படம் முழுவதும் இப்படியே வசனம் பேசுவதும் சிகரெட் குடிப்பதுமாக அவருடைய நடிப்பு நகர்ந்து இருக்கிறது.

சஞ்சனா கொலை காட்சியின் போது அவர் காட்டுகின்ற அந்த அதிர்ச்சியான அந்த நடிப்பு அந்த நிமிடத்தில் நமக்கு ஒரு பரிதாபத்தை வரவழைத்தது அதேபோல் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் அவர் மிக அலட்சியமாக உசுரோட இருந்தால் மீண்டும் சந்திக்கலாம் என்று பேசுகின்ற பொழுதும் அந்த ஒரு செகண்ட் லொகேஷன் மறந்துவிட்டு நாம் தேவதாசை மனதில் கொண்டு வருகிறோம் இதுபோல இடை இடையே சிறிசில காட்சிகளில் தன்னை மறைக்க வைத்து ஒரு கதாபாத்திரமாகவே நம் கண்ணுக்கு தெரிந்திருக்கிறார் லோகேஷ்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பயம் எவதசாக நடித்த லொகேஷன் என்ற இவரை பாராட்டி பேச இவர் இதுதான் வாழ்த்து என்ற எண்ணி இப்படியே நடிகராகிவிட்டால் இவருடைய இயக்கத் திறமையில் உருவாக வேண்டிய படங்கள் எல்லாம் என்ன ஆகும் ஆக இயக்குனர் லோகேஷ் இனிமேல் வெளியில் வரவேண்டும் நடிகர் லொகேஷை கொஞ்ச காலம் மறைத்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஆம்பளை மட்டும் தான் சேரர் குடிப்பானா பெண்கள் வாயில் சீரட்டை வைத்தால் அது பற்ற வைக்க முடியாதா என்ற கேள்வியுடன் பார்வதியாக நடித்திருக்கும் சஞ்சனா தான் வருகின்ற காட்சிகள் முழுவதிலும் சிகரெட்டை ஊதி தள்ளி இருக்கிறார் எவ்வளவு நல்ல பொண்ணு என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் இப்படி இருப்பதாக பாத்திரம் எனக்காகவே சிக்கி இருக்கிறது என்று சொல்லி நம் முகத்தில் கறியை பூசி இருக்கிறார் சஞ்சனா அவருடைய நடிப்பு ஓகே அவருடைய தோற்றமும் ஓகே அவருடைய உடை அலங்காரமும் ஓகே ஆனால் அவருடைய கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் மோசம் என்று தான் சொல்ல வேண்டும் சஞ்சனா சுதாரிச்சுக்கம்மா.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..

இரண்டாம் பாதியில் நிற்க வர நிறைந்திருக்கும் சந்திராயன் என்ற வாமிகா கவி பின்னி எடுத்து இருக்கிறார் கேமரா ஏற்ற முகம் ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை அடக்கி வைத்திருக்கும் இந்த ஆண் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அந்த வெறுப்பு ஒவ்வொரு ஆணையும் பார்க்கும் போதும் அவருடைய கண்களில் தெரிகிறது அதை மருத்துவரை அவர் கிளினிக்கில் உள்ளே சென்று சுட்டு தள்ளும்பொழுது அவர் காட்டுகின்ற அந்த வெறி நமக்கு பயத்தை கொடுக்கவில்லை ஆனால் கைதட்ட வைத்து விட்டது வன்முறை களஞ்சியம் தான் இந்த படம் ஆனாலும் இதில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒரு காட்சி என்றால் அது வாமிகா கபி செய்யும் இந்த வதம்தான்.

படுத்து இறுதிவரையிலும் இவரும் ஒரு போராளியாக மாறி துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சுட்டு தள்ளுகின்ற காட்சிகள் எல்லாம் அவருக்கே நிச்சயம் புதிதாகத் தான் இருக்கும் மிக சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார் வாமிகா காபி.

லோகேஷன் அப்பாவாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் கஸ்தூரிராஜா அப்பாக்களின் பிரதிநிதியாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் மேலும் அரசு வாகன நடித்த தலைவாசல் விஜய் கெட்டியாக நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன் கருப்பனாக நடித்திருக்கும் ஜவகர் சக்தி அவ்வளவு ரணகளத்திலும் காமெடியை காட்டி இருக்கும் சரத் ரவி மற்றும் பலரும் இந்த படத்தில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள் காரணம் அருண் மாதேஸ்வரன் என்ற சிறந்த இயக்குநரின் இயக்கம்.

ஜி மகேஷின் ஒலிப்பதிவு மிஷினின் படம் பார்த்தது போலவே இருக்கிறது விரைவில் தேவையில்லாத ஒரு ஆள் கூட இல்லை அதிகமாக கூட்டத்தை கூட்டாமல் அரிசியை எண்ணி எண்ணி வைப்பது போல நடிகர்களை மிக சிறிய அளவில் பிரேமுக்குள் கொண்டு வந்து அனைத்து கட்சிகளையும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் அது உன் கலர் கிரேடுகளும் டைட்டியை கூட்டங்கள் ஒரு மந்தமான ஒரு வெளிச்சத்தையே படம் முழுவதும் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அடித்த நட்சத்திரங்கள் அத்தனை பேரையுமே மிக அழகாக காட்டியிருக்கிறார் அதிலும் சஞ்சனாவை பிற்காட்டி இருக்கும் அந்த அழகு அட்டகாசம் வெறித்தனத்தை காட்டிய விதத்திலும் படத்திற்கு பெயர் கிடைக்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தம்பி அனிருத் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் இந்த படத்திலும் இறக்கி காட்டி இருக்கிறார் நான் போடுவது தான் இசை கேட்க வேண்டியது உங்களது கடமை என்பது போல அவர் அடித்த அடி இருக்கும் பின்னணி செயல் அனைவரின் காதுகளும் பஞ்சர் ஆகிவிட்டது ஒரு சில இடங்களில் தீம் மியூசிக் போல இடை இடையே வருகின்ற அந்த இடங்களில் மட்டும் தான் நமக்கு கொஞ்சம் ஆறுதல் மீதி எல்லாம் தர்ம அடிதான்.

இந்த கதைக்கு மிகப் பொருத்தமான எடிட்டிங் செய்திருக்கிறார் ஜி கே பிரசன்னா ஒரு பக்கம் ரவுடிகள் கூட்டம் இன்னொரு பக்கம் போலீஸ் துரத்துகின்ற அந்த திரைக்கதை வேகத்தை எந்த இடத்திலும் குறைத்து விடாத அளவுக்கு தன்னுடைய கத்திரிக்கோலால் மிக அழகாக நறுக்கி தந்திருக்கிறார் ஜி கே பிரசன்னா.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தானே காஸ்டிங் டிசைனர் ஆக இருந்து கூடை வடிவமைப்பையும் செய்திருக்கிறார் அதுவும் அழகாகத் தான் இருக்கிறது கலை இயக்குனரும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் துப்பாக்கிகளை இத்தனை வயது துப்பாக்கிகளையும் கொண்டு வந்து கொடுத்து எப்படி எல்லாம் சுடலாம் என்பது போல காட்டி சண்டை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார் சண்டை இயக்குனர்கள் பி சி ஸ்டண்ட்ஸ்.

வெட்டு குத்து எல்லாம் ஓகே தான் ஆனால் இந்த அளவுக்கு வேண்டுமா என்கின்ற ஒரு கேள்வியும் வருகிறது ரத்தம் திருட்டு தெறிக்கின்ற அளவுக்கு குருதியோட்டத்தை பதிவு செய்திருக்கிறார்கள் கத்தியால் குத்துவதையும், கழுத்தை வெட்டுவதையும் கை கால்களை வெட்டுவது ஏதோ கொசு அடிப்பது போல மிக எளிதாக செய்திருக்கிறார்கள் இதிலேயே நமக்கு மிக மிக டயர்ட் ஆகிவிட்டது இன்னும் எத்தனை கொலைகளை தான் நாம் பார்ப்பது என்ற ஒரு பயமும் கோபம் நமக்குள் ஏற்பட இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் வசனமும் இயக்கமும் நடிப்பும் அந்த நிமிடத்திலேயே நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்திற்கு போய்விட்டன.

இதுதான் போதாது என்றால் 2011 ஆம் ஆண்டு இவர்கள் ஏன் தேர்வு செய்தார்கள் என்பதும் தெரியவில்லை அந்த ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது இரும்புக்கரம் கொண்ட ஜெயலலிதா அவருடைய ஆட்சிக்காலத்தில் இதுபோன்று ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் உள்ளே நுழைந்து காவலர்களை சுட்டுக்கொன்று ஆயுதங்களை திருடி சென்ற சம்பவங்கள் நடக்கவில்லை அதற்கு முன்பாகவே வீரப்பன் மட்டுமே தமிழகத்தில் ஒரு முறையும் கர்நாடகாவில் எல்லையில் ஒரு முறையும் செய்திருந்தார் ஆனால் இங்கே 2011 என்று குறிப்பிட்டு ஏன் சொன்னார்கள் என்பது தெரியாததால் இந்தப் படத்தின் கதை நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்றே சொல்லலாம்.

அதிலும் 2011 ஆம் ஆண்டில் ஆங்கில மீடியத்தில் ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காக ஒரு பையனுக்கு கட்டணம் 11 லட்ச ரூபாய் என்று அந்த பையனின் அப்பா செல்வதெல்லாம் ஏற்க முடியாது என்ன சொல்ல வந்தார்கள் என்று இயக்குனர் தவறுதலாக குழப்பிப் போய்விட்டாரோ என்னவோ அல்லது பேசிய வசனத்தை டப்பிங் எடுக்காமல் சேர்க்காமல் விட்டு விட்டார்களோ என்னவோ தெரியவில்லை நிறைய குழப்பங்கள் அந்தக் காட்சியில் வந்துவிட்டது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் படுகொலைகள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன இந்த கொலைகளில் ஈடுபடுவோம் இளைஞர்கள் பள்ளிக்கூட இளைஞர்களும் கூட சிக்கி இருப்பது வேதனைக்குரியது.

இந்த நேரத்தில் இதுபோன்று கொலைகளை ஆராதிக்கும் திரைப்படங்களை அதை சரி என்று சொல்லும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளிவந்து அந்த இளைஞர்களின் மத்தியில் பார்வைக்கு போவது மிகப் பெரிய தவறு. கண்டிக்கத்தக்கது.

இது மாதிரியான வன்முறை களஞ்சியமான திரைப்படங்கள் இன்றைய இளைஞர்களின் மனதை வன்முறைக்குள் தள்ளுகின்றவிதமாகவே வந்து கொண்டிருக்கின்றன.

மசாலா படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

1980களில் 90களில் வந்த மசாலா திரைப்படங்கள் ஒரு குடும்பக் கதைகளாக வந்து கடைசியில் குடும்பத்தை ஒன்று சேர்ப்பது போலவும் கெட்டவன் வீழ்வது போலவும் நல்லவன் வாழ்வான் என்பது போலவும் ஒரு நல்ல நீதிக் கதைகளை சொன்னவை.

ஆனால் இப்போது வருகின்ற படங்களில் எல்லாம் வன்முறையை செய்பவன் கொலைகாரனும் கொள்ளைக்காரனும்தான் ஹீரோவாக காட்டப்படுகிறார்கள் என்பது தமிழ் சமூகத்தின் மீது தமிழ் திரைப்படத் துறையினர் சுமத்தும் ஒரு மிகப் பெரிய நோய் என்று சொல்லலாம்.

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய அடுத்த படைப்பில் ஆவது தன்னுடைய கொள்கையையும் கதை சொல்லும் முறையை மாற்றி சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 2.5 / 5

Our Score