full screen background image

சரத்குமாரின் பிறந்த நாளில் காவ்யா ஃபிலிம் கம்பெனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

சரத்குமாரின் பிறந்த நாளில் காவ்யா ஃபிலிம் கம்பெனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

‘2018’, ‘ரேக்கா சித்திரம்’ மற்றும் ‘மாளிகாபுரம்’ போன்ற பல பிளாக் பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது.

முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்த நாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

தனித்துவமான திரைக்கதை அமைப்பிலும், புத்தாக்கமான இயக்கத்திலும் பெயர் பெற்ற இவர், நடிகர் சரத்குமாரை இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் காட்டவுள்ளார்.

இத் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி பகிர்ந்து கொண்டதாவது:

“சரத்குமார் சார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எங்களது அடுத்த தமிழ் படத்தை அறிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அவரது நடிப்புத் திறமையும் பன்முகத் தன்மையும் திரைத்துறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவை.

ஒரு வலுவான கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய படக் குழுவும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்திற்கு சரத்குமார் சாரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும்.

இயக்குநர் கமல் பிரகாஷ் இந்த கதையை மிகத் தெளிவோடும் நம்பிக்கையோடும் அணுகியுள்ளார்.

ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது.

முழு படப்பிடிப்பையும் வரூமா மாதத்துக்குள் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு: ஆர்.கலைவாணன்
கலை இயக்கம்: எஸ்.எஸ். மூர்த்தி
கூடுதல் திரைக்கதை & வசனம்: தமிழ் பிரபா (Thamizh Prabha – ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’ புகழ்)
ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
லைன் புரொடியூசர்: கோபகுமார் ஜி.கே.
நிறுவன தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஷிபு ஜி சுசீலன்

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

நம்பிக்கை தரும் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் திறமைமிக்க இயக்குநர் கமல் பிரகாஷ் இணையும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 12’ திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Our Score