full screen background image

காட்டு விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும் ‘மலையப்பன்’ திரைப்படம்!

காட்டு விலங்குகள் நடமாடும் காட்டுப் பகுதியில் படமாகும் ‘மலையப்பன்’ திரைப்படம்!

சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஜே.சூரியாவின் உதவி இயக்குநரான குருச்சந்திரன் நடித்து இயக்கும் திரைப்படம் ‘மலையப்பன்’.

படத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ‘திருப்பாச்சி’ பட இயக்குர் பேரரசு, ‘திருடா திருடி’ பட இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சிட்டிசன்’ பட இயக்குநர் ஷரவணா சுப்பையா மற்றும் இன்னும் சில முன்னணி திரைப்பட நட்சத்திரங்களுடன், முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

‘லோக்கல் சரக்கு’, ‘கடைசி தோட்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த சுவாமிநாதன் இராஜேஷ் இசைக்கு , கவிஞர் காதல்மதி பாடல் எழுத, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா பாட, இராம்தாஸ் – விஜயா முகன் நடனம் அமைக்க, பி.எல். தேவா அரங்கம் அமைக்க, இலட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, இணைத் தயாரிப்பு திருப்பூர் செ. செல்வம் செய்கிறார்.

இத்திரைப்படம் பற்றி இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழியிடம் பேசும்போது, “சென்னை போன்ற பெருநகரத்தில் தொடங்கும் திரைப்படத்தின் கதை, ஒட்டு மொத்தமாக மலையும் மலை சார்ந்த இடமான மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை சுற்றியுள்ள கிராமங்களிலும், வாசிமலையான் கோயில் மலை, சதுரகிரி மலை, பருவதமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் இந்த கதையின் நிகழ்வுகள் நடப்பது போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக திரைப்படங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி காட்சி அமைப்புகள் இருக்கும். இந்த படத்தின் கதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு கதை எப்படி நகர்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாகவும் தத்ருபமாகவும் காட்சி ஆக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Our Score