ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடி முழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ‘இடி முழக்கம்’ படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் ‘இடி முழக்கம்’ திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
தற்போது படத்தில் இருந்து எனர்ஜிடிக்கான இரண்டாவது பாடலான ‘கானா விளக்கு மயிலே’ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்த ‘இடி முழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழி வாங்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதை.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டனர். படக் குழு இருவரின் வாழ்த்துக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை வரும் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.









