நடிகர் கார்த்தி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேவ்’ திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஊர் சுற்ற விரும்பும் வாலிபனாக நடித்துள்ளார். பைக்கிலேயே சென்னையிலிருந்து மும்பைவரையிலும் பைக்கிலேயே செல்லும் அளவுக்கு பைக் பயணத்தை விரும்பும் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இப்போதை அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு சுவையான போட்டியொன்றை ‘தேவ்’ படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
‘தேவ்’ BMW சூப்பர் பைக் போட்டி :
உங்கள் குடும்பத்தில் ‘தேவ்’ போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர் யாராவது உள்ளனரா…? ஆம்… என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
‘தேவ்’ திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.
போட்டி பற்றிய விவரங்கள் :
a.) நீங்களோ அல்லது
b.) உங்கள் குடும்பத்தினரோ அல்லது
c.) உங்கள் நண்பர்களோ.. ஏன் இந்த BMW SUPER BIKE-ஐ வெல்ல வேண்டும்..? என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.
அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
கேள்வி 1: ‘தேவ்’ திரைப்படத்தில், வாழ்க்கையைப் பற்றிய நாயகன் தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன..?
கேள்வி 2: ‘தேவ்’ திரைப்படத்தில், நாயகி மேக்னா பணத்தின் மீது அதிக பற்று உடையவரா..?
கேள்வி 3: ‘தேவ்’ திரைப்படத்தில் தேவ் – மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன..?
ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு வீடியோ மூலமாகவும் அனுப்பலாம்.
போட்டிக்கான கடைசி தேதி : 25.02.2019
பதில் அனுப்புபவர்களிடம் இருந்து சரியான பதில்களை ‘தேவ்’ திரைப்பட குழுவினர் தேர்ந்தெடுத்து 2 வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வர்.
வெற்றியாளர்களுக்கு நடிகர் திரு. கார்த்தி அவர்கள் அந்த 2 BMW சூப்பர் பைக்குகளை வழங்குவார்.
பரிசு வழங்கப்படும் தேதியை 28.02.2019 அன்று ‘தேவ்’ திரைப்பட குழுவினர் அறிவிப்பார்கள்.
பதில்களை பின்வரும் மின்னஞ்சல் ஐடி-க்கோ அல்லது பின்வரும் மொபைல் எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் – devbikecontest@gmail.com
வாட்ஸ்அப் எண் : 90000 90000
குறிப்பு :
- 2019-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் பதிவுகள் பரிசீலிக்கப்படாது.
- ‘தேவ்’ திரைப்பட குழுவின் முடிவே இறுதியானது.
- மேலே குறிப்பிடப்பட்ட போட்டி மற்றும் பரிசு விநியோகம் இந்திய சட்டங்களின்படியே இருக்கும்.











