full screen background image

சசிகுமார்-மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் துவங்கியது..!

சசிகுமார்-மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் துவங்கியது..!

‘ரெதான் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இந்தர்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’.

‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர்குமாரின் மூன்றாவது தயாரிப்பு இது.

இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். 

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத் தொகுப்பில், சண்டை காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜீ சுந்தரம் நடன இயக்கம் செய்ய, மைக்கேல் ராஜின் கலை இயக்கத்தில், மோகன்ராஜ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில், P.சந்துருவின் தயாரிப்பு மேற்பார்வையில், மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக் கொள்ள, படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் S.R.பிரபாகரன்.

தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து S.R.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தர பாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது இந்தக் கூட்டணி.

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகிறது. 

Our Score