full screen background image

“துப்பறிவாளன்-2’ படத்தை நானே இயக்குகிறேன்” – மிஷ்கினுக்கு விஷாலின் பதில்.

“துப்பறிவாளன்-2’ படத்தை நானே இயக்குகிறேன்” – மிஷ்கினுக்கு விஷாலின் பதில்.

‘துப்பறிவாளன்-2’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னதாக, நடிகரும், தயாரிப்பாளர் விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் திடீர் நிபந்தனைகள் சிலவற்றை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

இப்போது மிஷ்கினுக்கு விஷால் பதில் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இது :

கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல்… ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணமான 13 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்த பின்னர்,  படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த விலகல் முடிவு.. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா..? இல்லை. படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர்  சுட்டிக் காட்டினால்.. அது தவறா..? 

இங்கிலாந்தில் 3 முதல் 4 மணி நேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய்வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக் காட்டிய விஷயங்களா..? இல்லை.

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா..? இல்லை.

நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன்… ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கை விடுவது போல மோசமாக இருக்கிறது.

இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு,   இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல்  வாரத்தில் VFF  அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா..?

திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இந்த இயக்குநர் அறிந்திருக்கிறாரா…?

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்தத் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக் கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும்  உறுதி செய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இது போன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘துப்பறிவாளன்-2’  படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்.

இன்று மாலை 6 மணிக்கு ‘துப்பறிவாளன்-2’ படத்தின் முதல் தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்…”  

– இவ்வாறு நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Our Score