படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்டப்படும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு முன்னிலையில் இயக்குநர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“தங்களது துறையில் ஜாம்பாவான்களாக திகழும் தாணு சாரும், இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் மோகன் ராஜா சாரும் வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது. இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக சிறப்பாக இசை அமைத்து உள்ளார். பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து படத்தின் மூலக் கதையின் தன்மைக்கேற்ப பாடல்களை எழுதியுள்ளார்.
கலைப்புலி நிறுவனம் சார்பில் வெளிவரப் போகும் இந்த ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ நிச்சயம் எங்களுக்கு வெற்றிப் படமாக இருக்கும்’ என்று உறுதியுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் தேவன்ஷு ஆர்யா.