தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’.
இந்நிறுவனம் இப்போது முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படைப்பே சிறப்பாக இருக்கிறது.. பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் எழிலின் எழிலான இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் ‘வெள்ளக்கார துரை’ என்ற படத்தை இந்நிறுவனம்தான் தயாரிக்கிறது.
கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவா லட்சுமணன், விட்டல், வி.ஞானவேல், ‘மகாநதி’ சங்கர், டாடி சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வசனம் – எழிச்சூர் அரவிந்தன்.
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – D.இமான்
பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி
கலை – ரெமியன்
நடனம் – தினேஷ், தினா
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
எடிட்டிங் – கிஷோர்
தயாரிப்பு நிர்வாகம் – ஜெயராஜ், ரஞ்சித்
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ்
இணை இயக்கம் – பாலகணேசன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.
தயாரிப்பு – அன்பு செழியன்
படம் பற்றி இயக்குநர் எழிலிடம் கேட்டோம்…
ஒரே பிரச்னையில் சிக்கி தவித்த விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா இருவரும் அந்த பிரச்னையிலிருந்து மீண்டும் காதலில் ஒன்று சேரும் கதைதான் இந்த “வெள்ளக்கார துரை“. இரண்டு மணி நேரத்திற்கு ரசிகர்கனை முழுமையாகத் திருப்திபடுத்தும் அளவுக்கு காமெடி மற்றும் கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்றிருப்பதால் துவக்கம் முதல் இறுதிவரையிலும் காமெடி சரவெடியாக வெடிக்கும்.
நான் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘தீபாவளி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’ போன்ற படங்களைப் போல இதுவும் கமர்ஷியல் பார்முலா படம்தான். நல்ல நட்சத்திர நடிகர்கள், தரமான படமெடுக்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியன் போன்ற திறமையான கலைஞர்களின் கூட்டணியில் இந்த ‘வெள்ளக்கார துரை’ நிச்சயம் முத்திரை பதிப்பான்…” என்றார் இயக்குனர் எழில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பாண்டிச்சேரி மற்றும் சென்னை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.