full screen background image

டூரிஸ்ட் ஃபேமிலி – சினிமா விமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான் மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தடூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.

இதுவரையிலான பல திரைப்படங்களில் அகதி மக்களின் வாழ்க்கையை அங்கதமாக சொல்லாமல் வாழ்வின் விளிம்பு வரை செல்லும் துயர கதையாகத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல்முறையாக ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படமா இலங்கை அகதிகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இலங்கை வல்வெவட்டித்துறையில் இருந்து பிழைக்க வழி இல்லாமல் தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களுடன் நள்ளிரவில் கள்ளப் படகு மூலமாக ராமேஸ்வரம் வந்து சேர்கிறார் குடும்பத் தலைவரான தர்மதாஸ் என்ற சசிகுமார்.

அந்த நள்ளிரவிலேயே தமிழக போலீஸிடம் சிறைப்படும் சசிகுமாரின் குடும்பத்தினர் எப்படியும் அகதி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அல்லது சிறைக்கு செல்லப்படுவார்கள் என்று நினைத்திருக்கும் நேரத்தில் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி பையனான சிறுவன் மிதுன் தன்னுடைய சதுரயமான பேச்சினால் தலைமை காவலர் ரமேஷ் திலக்கின் மனதை வெகுவாக மாற்றிவிடுகிறான்.

நானும் உங்களை பார்க்கல.. நீங்களும் எங்களை பார்க்கல..” என்ற இருவருக்குமான ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு போலீஸ் வாகனம் சென்று விடுகிறது.

இவர்களை அழைத்துச் செல்ல வந்த சசிகுமாரின் மைத்துனர் யோகி பாபுவின் உதவியோடு சென்னைக்கு வரும் சசிகுமாரின் குடும்பம், வேளச்சேரியில் கேசவ நகர் என்ற ஒரு காலணியில் குடியேறுகிறது.

எதிர் வீட்டில் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கு டிரைவராக மாதம் முப்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர.. வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது அந்தக் குடும்பம்.

ஆனால் அதே சமயம் ராமேஸ்வரத்தில் நடைபெறும் ஒரு குண்டு வெடிப்பு இந்த குடும்பத்தின் நிம்மதியை குலைக்கிறது. யாரோ ஒருவன் குண்டு வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கிறான் என்ற சந்தேகத்தில் ஏட்டு ரமேஷ் திக்கின் உடன் இருந்த இரண்டு காவலர்களுக்கு இந்த குடும்பத்தின் மீது சந்தேகம் வருகிறது.

வேறு வழியில்லாமல் தன்னுடைய உயரதிகாரியிடம் இவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது ரவேஷ் திலக்கிற்கு..! இப்போது போலீஸ் இவர்களை வலை வீசி தேட ஆரம்பிக்கிறது. தங்களை போலீஸ் தேடுகிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சசிகுமாரின் குடும்பத்தினர்.

அடுத்தது என்ன நடந்தது.. இவர்கள் போலீசில் பிடிபட்டார்களா திரும்பவும் நாடு கடத்தப்பட்டார்களா என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.

சசிகுமாருக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு பம்பர் ஹிட்டு என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியும் ஒரு நகைச்சுவையை தன்னால் கொடுக்க முடியும் என்று அவரே நினைத்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக ஒரு குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

இயல்பாக வெளிவரும் நகைச்சுவையை தெறிக்கவிடும் அளவுக்கான வசனங்களை உச்சரிப்பதில் இருந்து எமோஷனலாக எம்.எஸ்.பாஸ்கரிடம் அட்டாச்சாகி அவரிடம் வந்து டிரைவர் வேலையை வாங்குவதிலும் அப்பகுதி மக்களிடையே அனைவரிடமும் இனிப்பாக இனிமையாக பேசி அவர்களிடம் ஒற்றுமையை கொண்டு வருவதற்கு ஏதுவாக அவர் பேசுகின்ற பேச்சும்காட்கின்ற நடிப்பும் நிச்சயம் சசிகுமாருக்கே புதிரானதுதான்.. வாழ்த்துக்கள் சசிகுமார்.

சிம்ரனா இது.. என்ற அனைவரும் ஆச்சரியத்தில் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு தியேட்டரில் தன்னுடைய காட்சிகள் அனைத்திலும் ஒரு ஆதிக்க தன்மையை நிலை நிறுத்தி காட்டி இருக்கிறார் சிம்ரன்.

காமெடி படம் என்பதால் அதற்கேற்றார் போலவே தன்னுடைய நடிப்பையும் மாற்றி அமைத்துக் கொண்டு, தன்னுடைய டயலாக் மாடுலேஷனையும் மாற்றிக் கொண்டு, தன்னுடைய நடிப்பையும் திருத்திக் கொண்டு, ஒரு அழகான குடும்பத் தலைவியாக அழகாகவே திரையில் ஜொலிக்கிறார் சிம்ரன்.

அவருடைய கடைசி மகன் மிதுன், அவ்வப்பொழுது அடிக்கின்ற விட்டுக்களுக்கும், அவன் டிக்கின்ற ட்விஸ்ட்டுகளுக்கும் தியேட்டரில் கை தட்டல்கள் தெறிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்கு பின்பான பல காட்சிகளில் இந்தப் பையனின் நடிப்பும், பேச்சும் அனைவரையுமே கவர்ந்திருக்கிறது.

மூத்த மகனாக நடித்திருக்கும் கமலேஷூம் தன் சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார். தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக அப்பாவிடம் சரிக்கு சரியாக வாக்குவாதம் செய்கின்ற இடத்திலும், தன்னுடைய காதலி தான் விட்டு விட்டு வந்துவிட்டதால் இன்னொரு திருமணம் செய்து கொண்டு போய்விட்டதாக மோஷனலாக அவர் பேசுகின்ற பேச்சுகளிலும் அவருடைய நடிப்பு பிரமாதம்.

இன்ஸ்பெக்டர் பக்ஸின் மகளாக நடித்திருக்கும் கண்மணி மிகவும் அழகாக இருக்கிறார். ஸ்கிரீனில் அவரை பார்க்கின்ற பொழுது கேமராவுக்கு ஏற்ற அழகான முகமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய நடிப்பையும் மிக அழகாக காட்டியிருக்கிறார் கண்மணி.

தன்னுடைய காதலன் தன்னுடைய நண்பியையே வளைத்துப் போட்டு பொண்டாட்டியாக்கி இருக்கும் அந்த செய்தியைக் கேட்டவுடன் ஓடி வந்து கோபத்தில் ஒரு அறைறையும்பொழுது அவருடைய நடிப்பு மிகவும் பிடித்து போகிறது. இவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

எம்.எஸ்.பாஸ்கர், அக்கம்பக்கம் யாருடனும் பேசாமல் வாழ்ந்து கடைசியாக தன் மனைவியை இழந்த பின்பு உண்மையை அறிந்து உறவுக் கரம் நீட்டும் குமரவேல், அவருடைய மனைவியாக நடித்த ஸ்ரீஜா ரவி, இன்ஸ்பெக்டர் என்றாலும் ஒரு சாதாரண கான்ஸ்டபிளுக்கு இருக்கும் ஒரு டேலண்ட்கூட இல்லாத ஒரு அப்பாவி இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பக்ஸூம், அவருடைய மனைவி யாக நடித்தவரும் மிக சிறப்பாக அவரவர் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்து இருக்கிறார்கள்.

சசிகுமாரின் மைத்துனராக வரும் யோகி பாபு துவக்கக் காட்சியில் அவர் அறிமுகமாகும் அந்த நொடியே சிரிப்லையை வரவழைத்துவிட்டார். அதற்கு பிறகும் கடைசி வரையிலும் அவ்வப்பொழுது வந்து விட்டு விட்டு அடித்துக் கொண்டே இருந்தவர் கடைசியாக, “என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற அந்த ஒரு ஒற்றை கேள்வியில் மொத்த தியேட்டரையும் கை தட்ட வைத்துவிட்டார். பாராட்டுக்கள் யோகி பாப்போம்.

இரவின் தொடக்கத்தில் பொங்கி வரும் கடல் அலையை அந்த இருண்மையான சூழலில் காட்டும் ஒளிப்பதிவு மறுநாள் காலையில் ராமேஸ்வரம் கடற்கரையைக் காண்பித்துராமேஸ்வரத்தின் சில பகுதிகளையும் காண்பித்து அழகுபடுத்தியிருக்கிறது.

படம் முழுவதும் அந்த ஒற்றை வீட்டுக்குள்ளேயே தன்னுடைய கேமராவை வைத்து அழகா எந்த ஒரு இடையூறும் இல்லாத அளவுக்கு காட்சிகளை படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இந்தப் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது மோகன்ராஜின் பாடல் வரிகள். மிக எளிமையாக காதுகளில் புகுவதுபோல் அமைந்திருப்பதும், அந்த வரிகளுக்கு ஏற்றபடியான மாண்டேஜ் காட்சிகளை அழகாக வடிவமைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. பின்னணி இசையில் ரொம்பவும் மனதை நோகடிக்காமல் அந்த காட்சிகளுக்கு ஏற்ற இயல்பை தன்னுடைய பின்னணி இசை மூலமாக கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர். பாராட்டுக்கள்.

கலை இயக்குனரை செம்மையாகப் பாராட்ட வேண்டும். அந்த சின்னஞ் சிறிய வீடு.. எம்.எஸ்.பாஸ்கரின் வீடு மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அனைத்தையும் மிக அழகாக கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள். அதேபோல் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பிழைக்க வந்தவர்கள் என்ற ரீதியில் அவருடைய உடை வடிவமைப்பும் கூட மிக எளிமையாக இருப்பது இயக்குரின் இயக்கத் திறமையை காட்டுகிறது.

படம் முழுவதையும் ஒரு நகைச்சுவை கலந்த எமோஷனலும் கலந்த ஒரு குடும்ப திரைப்படமாகவே உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டு திரைக்கதையை அமைத்திருக்கிறார் 24 வயதேயான அறிமுக யக்குநரான அபிஷேக் ஜீவந்.

அட்டகாசமான ஸ்கிரீன் பிளே.. மிக சிறப்பான ஆக்கம் சிறந்த இயக்கத் திறமை இந்த தம்பிக்கு இருக்கிறது. அது இந்தப் படத்தின் கடைசி காட்சிவரையிலும் நன்கு தெரிகிறது.

இயக்கத்திலேயே, திரைக்கதை ஆக்கத்திலேயே நகைச்சுவை கொண்டு வருவது என்பது எல்லா இயக்குர்களாலும் முடியாதது. ஒரு சில இயக்குர்களால் மட்டும்தான் முடியும். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குருக்கு நகைச்சுவை தெறிக்க வைக்கும் அளவுக்கு இயக்குதல் திறமை கிடைத்திருக்கிறது. அதை அவர் இன்னும் சிறப்பாக வரக் கூடிய திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்வார் என்று உண்மையாக நம்புகிறோம்.

பொதுவாக இது மாதிரியான அரசியலும், சமூக வாழ்க்கையும் கலந்த திரைப்படங்களில் லாஜிக் நிச்சயமாக பார்க்கப்படும். ஆனால் இந்தப் படத்தில் லாஜிக்கே நீங்கள் பார்க்க வேண்டாம் என்பது போல படத்தின் கடைசி வரையிலும் திரைக்கதையை அவ்வளவு அழகாக இயல்பாக வடிவம் வைத்திருக்கிறார் இயக்குர் இந்தக் காரணத்திற்காக இந்த இயக்குரை நாம் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

என்னடா எல்லா படங்களும் சீரியஸாகவே வந்து கொண்டிருக்கிறது.. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைக்கின்ற பொழுது இலங்கை அகதிகளின் கதையை வெறும் நகைச்சுவை துணுக்காக மட்டுமல்லாது அக்கம்பக்கம் இருப்பவர்களின் மன வாழ்க்கை மனித வாழ்க்கையையும் தொட்டுத் துலக்கி…

எங்கிருந்தோ வந்த ஒரு குடும்பம் இங்கே சென்னையில் இருப்பவர்களின் மன நிலையை மாற்றி அருகருகே இருப்பவர்களுடன் இணைந்து வாழுங்கள் என்று சொல்லிக் கொடுப்பதுபோல திரைக்கதையையும் அமைத்து மிக அழகான ஒரு குடும்பக் கதையாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குர்.

நிச்சயமாக இந்தப் படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க மகிழ வேண்டிய ஒரு திரைப்படம்..

பாருங்கள்.. மகிழுங்கள் கொண்டாடுங்கள்..!!!

RATING : 4 / 5

Our Score