full screen background image

விகாஸ்-ரோகிணி நடிக்கும் ‘துச்சாதனன்’ திரைப்படம்

விகாஸ்-ரோகிணி நடிக்கும் ‘துச்சாதனன்’ திரைப்படம்

தாய் திரையரங்கம் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர்கள் எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல்முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘துச்சாதனன்’.

இந்தப் படத்தில் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் ‘அகிலா’, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’, ‘ஒற்றாடல்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்! இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரோகிணி நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ‘லொள்ளு சபா’ மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் தளபதி. ஒளிப்பதிவு  – பி.வி.பாலமுருகன், இசை – விஜய் பிரபு, படத்தொகுப்பு – வி.எஸ்.விக்னேஷ், சண்டைப் பயிற்சி – ராக்கி ராஜேஷ், பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ்.

பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன்கள்தான். அப்படிப்பட்ட ஒரு சுயநலவாதியின் கதைதான் இந்த ‘துச்சாதனன்’ திரைப்படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக் கடையில் திருட்டு நடக்கிறது. அந்த திருட்டை யார் செய்தார்கள் என்று கண்டு பிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லப் போகிறார்களாம். படத்தில் மூன்று பாடல்களும், இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை பிரசாத் லேபில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score