full screen background image

‘காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் ‘தாய் நிலம்’ படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது

‘காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் ‘தாய் நிலம்’ படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது

‘தாய் நிலம்’ திரைப்படம் காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இந்த விருது விழாவில் ஆன்லைனில் திரையிடப்பட்டன.

அதில் ‘தாய் நிலம்’ திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதையும் பெற்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவாளராக ‘தாய் நிலம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.பிரசாந்த் பிரணவமும், சிறந்த அறிமுக இயக்குநர் விருதை இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

இந்த விருதை இலங்கையில் அனைத்தையும் இழந்து, அநாதைகள் ஆக்கப்பட்டு, தெருவில் முகவரி இன்றி வாழும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இதை சமர்ப்பிப்பதாக இயக்குநர் அபிலாஷும், ஒளிப்பதிவாளர் பிரசாந்தும், தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரனும் கூறினார்கள்.

டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவான ‘தாய் நிலம்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்ந்தெடுக்கக்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா திரை அரங்குகள் மீண்டும் திறந்தவுடன் இத்திரைப்படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது.

‘தாய் நிலம்’ திரைப்படத்திற்காக அவுசெப்பச்சன் இசையில், கவிஞர் பழனி பாரதி, தாமரை எழுதிய பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score