full screen background image

பிரகாஷ்ராஜுக்கு தடை விதிக்க தெலுங்கு இயக்குநர்கள் சங்கம் பரிசீலனை..!

பிரகாஷ்ராஜுக்கு தடை விதிக்க தெலுங்கு இயக்குநர்கள் சங்கம் பரிசீலனை..!

நடிகர் பிரகாஷ்ராஜ் செல்லம், செல்லம் என்று ரசிகர்களை கொஞ்சினாலும், அவர் மீது கொலை வெறியோடுதான் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்.

முன்பெல்லாம் கால்ஷீட் சொதப்பல் என்றால் அதற்கு ஒரேயொரு உதாரணம் பிரகாஷ்ராஜ்தான் என்பார்கள். இப்போது கூடவே அநாகரிகமாகவும் பேசத் துவங்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது பலமாக எழுந்துள்ளது. இங்கல்ல.. தெலுங்கு திரையுலகில்.

மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படமான ‘ஆகாடு’ படத்தின் ஷூட்டிங்கின்போது பிரகாஷ்ராஜ் பேசக் கூடாத வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி சொற்பொழிவாற்றிவிட்டாராம் ஷூட்டிங் ஸ்பாட்டில். இதனைக் கேள்விப்பட்டு இயக்குநர் மிகவும் கோபமடைந்து பிரகாஷ்ராஜை படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சோனு சூட்டை நடிக்க வைத்திருக்கிறாராம்.

இதேபோல சமீபத்தில் வெளிவந்த ‘ரேஸ் குர்ரம்’ படத்திலும் இதே கதைதானாம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதும் பிரகாஷ்ராஜ் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிருப்திபடுத்தியதால் படத்தில் பிரகாஷ்ராஜின் கேரக்டரை டம்மியாக்கி பல காட்சிகளில் கத்திரி போட்டுவிட்டாராம் இயக்குநர்.

இப்போது மேற்சொன்ன விஷயங்களை தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இயக்குநர்கள் சிலர் கொண்டு போய் புகாராக அளித்திருக்கிறார்கள்.. பிரகாஷ்ராஜுக்கு முற்றிலுமாக தெலுங்கு திரையுலகில் தடைவிதிக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கேட்கப்பட்டிருக்கிறதாம்.. இயக்குநர் சங்கத்தின் முடிவுதான் இனிமேல்..!

ஏற்கெனவே இதே போல பல முறை பிரகாஷ்ராஜ் மீது புகார்கள் வந்தபோதெல்லாம் சங்கங்களுக்கு ஓடி வந்து மன்னிப்பு கேட்டுத் தப்பித்துக் கொண்டாராம். ஆனால் இந்த முறை அவரை விடப் போவதில்லை என்று தெலுங்கு இயக்குநர்கள் சங்கம் உறுதியுடன் இருப்பதாகத் தகவல்.

செல்லம், ஏன் இப்படி ஓவரா செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கு..? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லியா..?

Our Score