மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தீ இவன்.’
இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – Y. N.முரளி, படத் தொகுப்பு – மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை – A.J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M.அப்பு, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – நிர்மலாதேவி ஜெயமுருகன்.
‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T.M.ஜெயமுருகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ளாராம். இது பற்றி இயக்குநர் T.M. ஜெயமுருகன் பேசும்போது, “நம் தமிழ் சமூகம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும், கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும்விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ‘மேலே ஆகாயம்; கீழே பாதாளம்; நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.
நேற்று முன் தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன். கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக் கொண்டார். அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பாடலின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் T.M.ஜெயமுருகன்.










