தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர்.ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.
தொழில் நுட்பக் குழு விவரம்:
இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
பத்திரிக்கை தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)
மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ










