full screen background image

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ திரைப்படம் துவங்கியது..!!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ திரைப்படம் துவங்கியது..!!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் ‘சிங்காநல்லூர்  சிக்னல்’ படத்தின் பூஜை, படக் குழுவினர் கலந்து கொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். ‘லேபில்’ வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, P.L.தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

தயாரிப்பு – முத்தமிழ் படைப்பகம், தயாரிப்பாளர் – A.J.பிரபாகரன், இயக்குநர் – J.M.ராஜா, ஒளிப்பதிவாளர் – தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு – பிரதீப் E.ராகவ், கலை இயக்குநர் – சம்பத் திலக், சண்டை இயக்குநர் – சக்தி சரவணன், ஆடை வடிவமைப்பாளர் – அஞ்சுஸ்ரீ, நிர்வாகத் தயாரிப்பாளர் – ஹரிசங்கர், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் AIM.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன்  சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம்.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் J.M.ராஜா.

இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடந்த படத்தின் பூஜையை தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் முத்தமிழ் படைப்பகம் சார்பில் A.J.பிரபாகரன் பேசும்போது, “எங்களது ‘லேபில்’ படைப்புக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், வரவேற்பிற்கும் நன்றி. ‘லேபில்’ வெற்றியைத் தொடர்ந்து, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில், இப்படத்தை உற்சாகமாகத் துவங்கியுள்ளோம். இப்படத்தில் நடனப்புயல் பிரபு தேவா அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். அவர் ஆடினால் ரம்பா, ஊர்வசியே மயங்குவார்கள், நாமும் மயங்குவோம். படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். எல்லோருக்கும் நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “இந்த சிங்காநல்லூர்  சிக்னல்”  படக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார். இந்தப் படத்தில் புதிய இயக்குநராக  J.M.ராஜாவை அறிமுகப்படுத்துகிறார்கள். திரைத்துறையில் புதிதாகத் திறமையாளர்கள் வருவது நல்லது. இந்தப் படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசும்போது, “மாஸ்டர் கமல்ஹாசன் மிஸ்டராகிவிட்டார். ஆனால் பிரபுதேவா மட்டும் இன்னும் மாஸ்டராகவே இருக்கிறார். முத்தமிழ் படைப்பகம் என் வீடு மாதிரி. மிக, மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். பிரபு தேவா சார், சமீபத்தில் நான் நடித்த படத்தில் மிகவும் உதவியாக இருந்தார். அவர் நடனப் புயல் மட்டுமில்லை, இயக்குநர் புயலும்தான். இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும்  வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் P.L.தேனப்பன் பேசியதாவது, “இந்த “சிங்காநல்லூர்  சிக்னல்”  படக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். என்னையும் நடிக்க அழைத்தார்கள். இயக்குநர் எனது நெருங்கிய நண்பர், இந்தக் கதையை என்னிடம் சொல்லியுள்ளார். படம் கண்டிப்பாக நன்றாக வரும். என்னை நடிக்க அழைத்ததால் வந்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி..” என்றார்.

நடிகர் ஸ்ரீமன் பேசும்போது, “இந்த “சிங்காநல்லூர்  சிக்னல்” எப்போதும் க்ரீனாகத்தான் இருக்கும். இன்று சினிமா இருக்கும் சூழ்நிலையில்,  தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், இப்படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ள பிரபாகரன் சாருக்கு நன்றி. அவர் படமெடுத்தால் கண்டிப்பாகத் திரைக்குக் கொண்டு  வந்துவிடுவார். மாஸ்டர் பிரபுதேவா, அவர் பாடலே பான் இந்தியா வெற்றி பெற்றது. நமக்கு பெருமை தேடித் தரும் மாஸ்டர், அவருடன் இது எனக்கு ஐந்தாவது படம் மகிழ்ச்சி. இயக்குநர் இதற்கு முன் பல படங்களுக்கு கதை, வசனத்தை எழுதியுள்ளார். 12 வருடமாக சினிமாவில் இருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தை வெற்றிப் படமாக இயக்குவார். எல்லோருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் சுப்பு பஞ்சு பேசும்போது, “முத்தமிழ் படைப்பகம் அவர்களுடன் லேபில் படத்தில் பணிபுரிந்தேன். மிகச் சிறப்பான தயாரிப்பு நிறுவனம், சொன்ன மாதிரி கச்சிதமாக நடந்து கொள்வார்கள். கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

நடிகை பவ்யா ட்ரிக்கா பேசும்போது, “முத்தமிழ் பதிப்பகத்திற்கு என் நன்றிகள். வாய்ப்பு தந்த இயக்குநர் ராஜா சாருக்கு நன்றி. பிரபுதேவா சாருடன் நடிக்க வேண்டும் டான்ஸ் ஆட வேண்டும் என்பது என் கனவு. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ரொம்ப நல்ல டீம். கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவோம்..” என்றார்.

இயக்குநர் J.M.ராஜா பேசும்போது, “எல்லா உதவி இயக்குநர்களின் வாழ்க்கை போலத்தான் என்னுடையதும். கையில் பவுண்ட் ஸ்கிரிப்போடு சுத்திக் கொண்டிருந்தபோது கேமராமேன் பன்னீர்செல்வம் சார் பிரபு தேவா சாரிடம் கூட்டிட்டுப் போனார். என் திரைக்கதையைப் படித்து விட்டு ஒகே சொன்னார் பிரபுதேவா சார். தயாரிப்பாளருக்காக அலைந்தோம், காம்பொ இயக்குநர்களைத் தேடும் சினிமாவில்,  என்னுடைய கதையை பிரபாகரன் சார் படித்துவிட்டு, ஓ.கே. சொன்னார். மேஜிக் மாதிரி இப்படம் நிகழ்ந்தது. முழுக்க, முழுக்க சிரித்து மகிழும் என்டர்டெயினராக இப்படம் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசும்போது, “இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்தக் கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக் கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக் குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score