உலகப் புகழ் பெற்ற காளிதாசரின் ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘ஷாகுந்தலம்’.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, குணா டீம் வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர்.
மேலும் சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம்.மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை, உலகப் புகழ் பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தினை இயக்குநர் குணசேகர் எழுதி, இயக்கியிருக்கிறார்.
ராஜா துஷ்யந்தனின் ‘புரு’ வம்ச ஆட்சிக் காலத்தை, மிக அழகாக மற்றும் பிரம்மாண்டமாக காட்சியமைக்க, காஷ்மீரில் உள்ள கஷ்யப்பா கணுமாலுவில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குநர் குணசேகர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் அட்டவணை, ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் வரும் நவம்பர்-4-ம் தேதி வெளிவரவுள்ளது.