சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’.
இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
திரைக்கதை – ராஜேஷ் மோகன், ஒளிப்பதிவு – வினோத் பாரதி.A, ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவீ, தயாரிப்பு மேற்பார்வை – ரிச்சர்ட், இணை தயாரிப்பாளர் – சுஜில் குமார், புகைப்படங்கள் – நிதாத் K.N., வடிவமைப்பு – ஆதின் ஒல்லூர், பத்திரிகை தொடர்பு – K.S.K.செல்வா. இந்தப் படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.
இந்த படத்தின் துவக்க விழா மகர விளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது.
பிரபல இயக்குநரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், கிளாப் அடித்து படத்தைத் துவங்கி வைத்தார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை, மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறையாகும்.
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.
Our Score