இயக்குநர் வெற்றி மாறன் ‘நாம் அறக்கட்டளை’யின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வகத்தைத் துவக்கியுள்ளார்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து…
உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா என்பதை அறிய அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றுப் பார்த்து..
தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து…
அவர்களது குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத் துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்த ‘நாம் அறக்கட்டளை’ நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின்போது தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு முதல் நபராக ஒரு கோடி ரூபாயை வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து, இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர், மாணவிகளில் வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார்.
அப்போது ‘நாம் அறக்கட்டளை’யை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன், வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜநாயகம்(லயோலா கல்லூரி) அவர்களும் உடன் இருந்தார்கள்.