full screen background image

“மத்திய அரசை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்..?” – தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி

“மத்திய அரசை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்..?” – தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி

நடிகர் விஜய் சமீப காலமாக நாட்டுப் பிரச்சினை பற்றி எந்தவொரு கருத்தையும் கூறாமல் அமைதியாய் இருப்பதன் காரணம் என்ன என்று நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ‘நிக்குமா நிக்காதா?’ என்கிற குறும் படத்தின் வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசும்போது இந்தக் கேள்வியை எழுப்பினார்.

அவர் பேசும்போது, இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து  வந்தனர். அந்தப் பயணத்தின்போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால், அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இது போன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா?..” என்று கேள்வியெழுப்பினார்.

Our Score