full screen background image

பேய்க் காதலர்களை இணைத்து வைக்கும் கதைதான் ‘பியார்’ திரைப்படம்..!

பேய்க் காதலர்களை இணைத்து வைக்கும் கதைதான் ‘பியார்’ திரைப்படம்..!

விண்டோபாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் V.பாலகிருஷ்ணன், R.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பியார்’.

இந்தப் படத்தில் முன்னணி நடிகர்  கதாநாயகனாகவும் முன்னணி நாயகி கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசு விக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும்  சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – N.ஆனந்தகுமார், இசை – A.K.ரிஷால் சாய், பாடல்கள் – வ.கருப்பன், படத் தொகுப்பு – ரமேஷ் வேலுகுட்டி, நடன இயக்கம் – அசோக்ராஜா, சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், கலை இயக்கம் – முத்துவேல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மில்கா எஸ்.செல்வகுமார்.

இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது நட்ராஜ் – மனிஷா யாதவ் நடிப்பில் முடிவடையும் நிலையில் உள்ள ‘சண்டி முனி’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கும் இரண்டாவது படம் ‘பியார்.’

பியார் படம் பற்றி இயக்குநர் மில்கா எஸ்.செல்வக்குமார் பேசும்போது, “வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள். இந்தப் படத்தில் வித்தியாசமாக  ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை, பேயுடன் சேர்த்து வைப்பதுதான் இதன் கதை. பேய்க் காதல் என்றும் சொல்லலாம். வரும் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..” என்றார்.

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி என்று இயக்குநரிடம் கேட்டபோது. “சண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட இந்தப் புதிய படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை ‘பியார்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான்  சொன்னபடி சொன்ன நேரத்தில் படத்தை நிச்சயமாக முடித்துக் கொடுப்பேன்…” என்றார்.

Our Score