full screen background image

உருவாகிறது ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம்..! 

உருவாகிறது ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம்..! 

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979–ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நீயா.’ இன்றுவரை தமிழில் ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு ‘நீயா’ ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம்.

மீண்டும் 39 வருடங்களுக்கு பின் அதே பெயரில் ‘நீயா-2’ படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார். திரையுலகில் பல வருடங்கள் தயாரிப்பு  துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

படத்தில் வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசாவும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – ட.சுரேஷ். இவர் ‘எத்தன்’ படத்தை இயக்கியவர். இசை – ஷபிர், ஒளிப்பதிவு – இராஜவேல் மோகன், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – ஐயப்பன், சண்டை பயிற்சி – ஸ்டண்ட்  ஜி.என்., நடனம் – கலா, விஜி, பாடல்கள் – கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் – ஆக்சல் மீடியா (ACCEL MEDIA), மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இந்தப் படத்தில் ராஜ நாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜ நாகம் படம் முழுக்க இடம் பெறும்கிறதாம்.

இது பற்றிப் பேசிய இயக்குநர் எல்.சுரேஷ், “ராஜ நாகத்தின் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் நாங்கள் எதிர்பார்த்தது போன்ற ராஜ நாகத்தை பார்த்தோம்.

அதன் அமைப்பு , உடல் மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்து கொண்டோம். இந்த ராஜ நாகம் படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசிக்கும்விதமாக இதன் காட்சிகள் இருக்கும்.

இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் நடைபெறவுள்ளது…” என்றார்.

Our Score