ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.ரவிக்குமார் பிரமாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம்-79’.
இந்தப் படத்தில் ராஜ்பரத் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக ரேஷ்மி மேனன் மற்றும் தேஜஸ்வினி நடித்திருக்கிறார்கள். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடித்திருக்கிறாகள். ‘கலக்கப் போவது யாரு’ சீரியலில் கலக்கிய விக்னேஷ் கார்த்திக் இந்தப் படத்தில் காமெடியனாக அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ்
இசை – தீபக் நிலம்பூர்
எடிட்டிங் – சாபு ஜோஸப் (இவர் சென்ற வருடம் வல்லினம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றவர்)
பாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன்
நடனம் – ராஜூ சுந்தரம், பிருந்தா, விஜி
தயாரிப்பு – டி.ரவிக்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவிச்சந்திரன்
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரவிச்சந்திரன், “கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான் இயக்கும் 5-வது படம் இது.
‘மஜ்னு’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தினேன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ‘கண்ணெதிரே தோன்றினால்’ படத்திலும் தேவா இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்டுதான்.
அதேபோல் இந்தப் படத்தில் புதிய இசையமைப்பாளர் தீபக் நிலம்பூரின் அசத்தலான இசையில் 5 பாடல்களுமே மிகச் சிறப்பாக வந்துள்ளன. இந்த வருடத்தின் முக்கிய ஹிட் பாடலாக இப்படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடியிருக்கும் ஒரு கானா பாடல் இடம் பெறும்.
‘கண்ணெதிரே தோன்றினாள்’ படம் நட்பையும், காதலையும் சொன்ன வித்த்தில் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதேபோல் இந்த ‘நட்பதிகாரம்-79’ படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றி வேறொரு புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கிறேன். இதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்றே உறதியாக நம்புகிறேன்..” என்றார் உற்சாகத்தோடு..!