D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் ‘மெல்ல திறந்தது மனசு.’
தெலுங்கில் ‘மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு’ என்ற பெயரில் நேற்றைக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியான படமே, தமிழில் ‘மெல்ல திறந்தது மனசு’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக நிகிதா நாராயணன் நடித்திருக்கிறார். மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா, நந்தனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.வி.ரகு, இசை – சக்ரி, வசனம் – நந்து, பாடல்கள் – சி.புண்ணியா, எடிட்டிங் – ரெட்டி, கதை, திரைக்கதை, இயக்கம் – வம்சி, தயாரிப்பு – D.வெங்கடேஷ்,
படம் பற்றி இயக்குநர் வம்சி பேசும்போது, “சிறு வயதில் தனக்கு மனைவியாக வரப் போவது இவள்தான் என்று ஒரு பெண்ணை பெரியோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அஜ்மல் வளர்ந்து வேறொரு இடத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்போது அந்தப் பெண் எங்கு இருக்கிறார் என்று அஜ்மலுக்கு தெரியாது.
இடையில் அஜ்மலை ஒரு பெண், ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் அஜ்மல் தனக்கு மனைவியாக வர வேண்டிய அந்த சிறு வயதில் சொல்லிய பெண்ணை தேடி ஊர், ஊராக சென்று தேடுகிறார். அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருக்கிறது..” என்றார்.
கதை நல்லாயிருக்கே..!? மத்தவங்க சுடுறதுக்கு முன்னாடியே கொண்டாந்துட்டாங்க. புத்திசாலி தயாரிப்பாளர்..!